|
|
செய்யுள்
48
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
அறுகுந்
தும்பையு மணிந்தசெஞ் சடையுங்
கலைமான் கணிச்சியுங் கட்டிய வரவமும்
பிறவுங் கரந்தொரு கானவ னாகி
யருச்சுன னருந்தவ மழித்தமர் செய்தவன்
கொடுமரத் தழும்பு திருமுடிக் கணிந்து |
10
|
|
பொன்னுடை
யாவந் தொலையாது சுரக்கப்
பாசுப தக்கணை பரிந்தருள் செய்தேன்
வாசவன் மகட்புணர்ந்து மூன்றெரி வாழத்
தென்கட னடுத்திடர் செய்துறைந் திமையவ
ரூருடைத் துண்ணுஞ் சூருட றுணித்த |
15
|
|
மணிவேற்
குமரன் களிமகிழ் செய்த
பேரருட் குன்ற மொருபாற் பொலிந்த
வறப்பெருங் கூடற் பிறைச்சடைப் பெருமான்
றிருவடிப் பொருந்தேன் பருகுநர் போல
மணமுடன் பொதுளிய வாடா மலர்த்தழை |
20
|
|
யொருநீ
விடுத்தனை யானவை கொடுத்தன
னவ்வழி கூறி னத்தழை வந்து
கண்மலர் கவர்ந்துங் கைம்மலர் குவித்து
நெட்டுயிர்ப் பெறிய முலைமுக நெருக்கியு
மூடியும் வணங்கியு முவந்தளி கூறியும் |
|
|
பொறையழி
காட்சிய ளாகி
நிறையழிந் தவட்கு நீயா யினவே. |