|
|
செய்யுள்
51
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பெருமறை
நூல்பெறு கோன்முறை புரக்கும்
பெருந்தகை வேந்த னருங்குணம் போல
மணந்தோர்க் கமுதுந் தணந்தோர்க் கெரியும்
புக்குழிப் புக்குழிப் புலன்பெறக் கொடுக்கு
மலையத் தமிழ்க்கால் வாவியுட் புகுந்து |
10
|
|
புல்லிதழ்த்
தாமரைப் புதுமுகை யவிழ்ப்ப
வண்டினம் படிந்து மதுக்கவர்ந் துண்டு
சேயிதழ்க் குவளையி னிரைநிரை யுறங்கு
நிலைநீர் நாட னீயே யிவளே
மலையுறை பகைத்து வானுறைக் கணக்கும் |
15
|
|
புட்குலஞ்
சூழ்ந்த பொருப்புடைக் குறவர்தம்
பெருந்தேன் கவருஞ் சிறுகுடி மகளே
நீயே, ஆயமோ டார்ப்ப பரிகிணை முழக்கி
மாயா நல்லறம் வளர்நாட் டினையே
இவளே, தொண்டகம் துவைப்பத் தொழிற்புனம் வளைந்து |
20
|
|
பகட்டினங்
கெல்லும் பழிநாட் டவளே
நீயே, எழுநிலை மாடத் திளமுலை மகளிர்
நடஞ்செயத் தரள வடந்தெறு நகரோய்
இவளே, கடம்பெறு கரிக்குல மடங்கல் புக்ககழத்
தெறித்திடு முத்தந் திரட்டுவைப் பினளே |
25
|
|
நீயே,
அணிகெழு நவமணி யலரெனத் தொடுத்த
பொற்கொடித் தேர்மிசைப் பொலிகுவை யன்றே
இவளே, மணிவாய்க் கிள்ளை துணியா தகற்ற
நெட்டித ணேறு மிப்புனத் தினளே
யாதலிற் பெரும்புக ழணைகுதி யாயி |
|
|
னாரணன்
படரத் தேவர்கெட் டோட
வளிசுழல் விசம்பின் கிளர்முக டணவிக் |