|
|
செய்யுள்
52
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
நடைத்திரைப்
பரவை நாற்கட லணைத்து
வரையறுத் தமைந்த வகைநான் காக
விதிவரத் திருத்திய மேதினிப் பொறையைக்
குருமணி விரித்தலிற் றேனொடு கிடந்து
மாயாது தொடுத்த மணமலர் சுமத்தலின் |
10
|
|
வரையென
நிறுத்திய திருவுறை பெருந்தோ
டரித்து மணைத்துந் தானெனக் கண்டுஞ்
செய்தது மன்றித் திருமனம் பணைத்துக்
காக்கவும் குரிசில் கருத்துறும் போலும்
விடையா வடந்தைசெய் வெள்ளியஞ் சிலம்பினுந் |
15
|
|
தென்கால்
விடுக்குஞ் செம்பிற் பொருப்பினுங்
கொண்டல்வந் துலவு நீலக் குவட்டினுங்
கோடைசென் றுடற்றுங் கொல்லிக் கிரியினும்
பிறந்தவர் விறவாப் பெரும்பதி யகத்து
முடிந்தவர் முடியா மூதூ ரிடத்துங் |
20
|
|
கண்டவர்
காணாக் காட்சிசெய் நகரினும்
வேதத் தலையினும் விதியாக மத்தினுங்
கல்விய ருளத்துங் கவர்நெஞ் சகத்துந்
தெய்வம் விடுத்துப் பொய்கொள்சிந் தையினுங்
கொலையினர் கண்ணுங் குன்றா தியைந்து |
25
|
|
வெளியுறத்
தோன்றி யிருளுற மறைந்த
விஞ்சைவந் தருளிய நஞ்சணி மிடற்றோன்
சந்தமும் பதமுஞ் சருக்கமு மடக்கமுஞ்
சின்னக் குறளுஞ் செழுங்கார் போலப்
பெருமறை முழுங்குந் திருநகர்க் கூட |
|
|
லொப்புற்
றடைமலர் சுமந்த
மைப்புறக் கூந்தற் கொடிவணங் கிடையே. |