|
|
செய்யுள்
54
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
கொன்றையந்
துணரிற் செவ்வழி குறித்தும்
வாலுழை யெருக்கில் வளருழை பாடியுங்
கூவிளங் கண்ணியிற் குலக்கிளை முரற்றியும்
வெண்கூ தளத்தின் விளாரிநின் றிசைத்தும்
வண்டுந் தேனு ஞிமிறுஞ் சுரும்பு |
10
|
|
முமிழ்நற
வருந்தி யுறங்குசெஞ் சடையோன்
மதுமலர் பறித்துத் திருவடி நிறைத்த
நான்மறைப் பாலனை நலந்துயிர் கவருங்
காலனைக் காய்ந்த காலினன் கூடற்
றிருமருங் கணைந்து வருபுனல் வையை |
15
|
|
வரையுரண்
டென்னத் திரைநிரை துறையகத்
தணந்தெடுத் தேந்திய வரும்புமுகிழ் முலையோண்
மதிநுதற் பெருமதி மலர்முகத் தொருத்தியை
யாட்டியு மணைத்துங் வட்டியுங் குலவியு
மேந்தியு மெடுத்து மொழுக்கியு மீர்த்து |
20
|
|
முழக்கியுந்
தபுத்தியு முலையொளி நோக்கியும்
விளிமொழி யோற்றும் விதலையிற் றிளைத்தும்
பூசியும் புனைந்தும் பூட்டியுஞ் சூட்டியு
நிறுத்தியு நிறைத்து நெறித்துஞ் செறித்து
மெழுதியுந் தப்பியு மியைத்தும் பிணித்துங் |
25
|
|
கட்டியுங்
கலத்தியுங் கமழ்த்தியு மறைத்துச்
செய்தன வெல்லாஞ் செய்யலர் போலவென்
னெட்டிலை பொலிந்தபொன் னிறைதிரு வுறையுளிற்
பாசடைக் குவளைச் சுழன்மணக் காட்டினைக்
கருவரிச் செங்கண் வராலினங் கலக்க |
30
|
|
வெரியலர்
முண்டகத் தடவிதிக் கெறிய
வெள்ளுடற் கருங்கட் கயனிரை யுகைப்ப
மரகதப் பன்னத் தாம்பலங் குப்பையைச்
சொரியெயிற்றுப் பேழ்வாய் வாளைக டுவைப்பப்
படிந்துசே டெறியுஞ் செங்கட் கவரியு |
|
|
மலைசூழ்
கிடந்த பெருங்குலைப் பரப்பை
மலைகொடு மலைந்த முதுநீர் வெள்ளமு |