420கல்லாடம்[செய்யுள்55]



லேயே தலைவனை என்வயப்படுத்தி அவன் வேறு பரத்தையை நினையாதபடி செய்யேனாயின், தன்கண் நலமின்மையால் தலைவனை நம் பால்விட்டு அழுதுகொண்டிருக்கின்ற தலைவியை ஒப்பாவேன் இல்லனோ என்கின்றாள். எனவே நீயிர் அது பற்றிக் கவலவேண்டா என்று கூறுகின்றாள் என்க. இதனால் இப்பரத்தை தலைவியினும் தான் சிறந்தவள் எனத் தன்னை வியத்தலுணர்க. மெய்ப்பாடு- வெகுளி. பயன் - தற்பெருமை கூறுதல்.

 
 

செய்யுள் 55

நேரிசையாசிரியப்பா

 
   
5
  விடங்கொதித் துமிழும் படங்கெழு பகுவாய்க்
கண்டன்முண் முளைத்த கடியெயிற் றரவக்
குழுவினுக் குடைந்து குளிர்மதி யொதுங்கத்
தெய்வப் பிறையிருந்த திருநதற் பேதையைக்
கண்டுகண் டரவ மயிலெனக் கலங்க
10
  நெடுஞ்சடைக் காட்டினை யடுந்தீக் கொழுந்தெனத்
தலையே தலையா நகுதலை தயங்க
வணதிலை மாலையை நிறைமதித் திரளெனப்
புடைபுடை யொதுங்கி யரவுவாய் பிளப்ப
வொன்றினுக் கொன்று துன்றிய நடுக்கொடு
15
  கிடந்தொளி பிறழு நெடுஞ்சடைப் பெருமான்
படைநான் குடன்று பஞ்சவற் றுரந்து
மதுரை வவ்விய கருநடர் வேந்த
னருகர்ச் சார்ந்துநின் றரன்பணி யடைப்ப
மற்றவன் றன்னை நெடுந்துயில் வருத்தி
20
  யிறையவன் குலத்து முறையரின் மையினாற்
குருதித் தாரை கல்லொடு பிறங்க
மெய்யணி யளறாக் கைம்முழந் தேய்த்த
பேரன் புருவப் பசுக்கா வலனை
யுலகினிற் றமது முக்குறி யாக
25
  மணிமுடி வேணியு முருத்திரக் கலனு
நிலவுமிழ் புண்ணியப் பானிறச் சாந்தமு
மணிவித் தருள்கொடுத் தரச னாக்கி
யடுமா லகற்றி நெடுநாள் புரக்க
வையக மளித்த மணியொளிக் கடவு
  ணெடுமதிற் கூடல் விரிபுனல் வையையுட்