|
|
செய்யுள்
56
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
அடியவ
ருளத்திரு ளகற்றலின் விளக்கு
மெழுமலை பொடித்தலி னனறெறு மசனியுங்
கருங்கடல் கடித்தலிற் பெருந்தழற் கொழுந்து
மாவுயிர் வௌவலிற் றீவிழிக் கூற்று
மென்னுள மிருத்தலி னியைந்துண ருயிரு |
10
|
|
நச்சின
கொடுத்தலி னளிர்தரு வைந்துங்
கருவழி நீக்கலி னுயர்நிலைக் குருவு
மிருநிலங் காத்தலின் மதியுடை வேந்து
மாகிய மணிவேற் சேவலங் கொடியோன்
வானக மங்கையுந் தேன்வரை வள்ளியு |
15
|
|
மிருபுறந்
தழைத்த திருநிழ லிருக்க
மொருபரங் குன்ற மருவிய கூடற்
பெருநதிச் சடைமிசைச் சிறுமதி சூடிய
நாயகன் றிருவடி நண்ணலர் போலப்
பொய்பல புகன்று மெய்யொழித் தின்பம் |
20
|
|
விற்றுணுஞ்
சேரி விடாதுறை யூர
னூருணி யொத்த பொதுவாய்த் தம்பல
நீயுங் குதட்டினை யாயிற் சேயாய்
நரம்பெடுத் துமிழும் பெருமுலைத் தீம்பாற்
குள்ளமுந் தொடாது விள்ளமு தொழுகுங் |
25
|
|
குதலைவாய்
துடைப்பக் குளக்கடை யுணங்கியு
மண்ணுறு மணியெனப் பூழிமெய் வாய்த்தும்
பொலன்மணி விரித்த வுடைமணி யிழுக்கியுஞ்
சுட்டியுஞ் சிகையுஞ் சோர்ந்துகண் பனித்தும்
பறையுந் தேரும் பறிபட் டணங்கியு |
|
|
மறிக்கட்
பிணாவின ரிழைக்குஞ் சிற்றிலிற் |