|
|
செய்யுள்
57
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
நடைமலை
பிடித்த சொரியெயிற் றிடங்கரை
யாழி வலவ னடர்த்தது போலப்
புன்றலை மேதியைப் புனலெழ முட்டிய
வரியுடற் செங்கண் வராலுடன் மயங்க
வுட்கவைத் தூண்டி லுரம்புகந் துழக்கு |
10
|
|
நிறைநீ
ரூர நெஞ்சகம் பிரிக்கும்
பிணிமொழிப் பாண னுடனுறை நீக்கி
நூலொடு துவளுந் தோறிரை யுரத்தின்
மால்கழித் தடுத்த நரைமுதிர் தாடிசெய்
வெள்ளி முகிழ்த்த வொருகட் பார்ப்பான் |
15
|
|
கோலுடன்
படருங் குறுநகை யொருவிப்
பூவிலைத் தொழின்மகன் காவல்கை விட்டுத்
திக்குவிண் பெருகத் திருமதி கைலை
நாமகள் பெருங்கட னாற்கோட் டொருத்தல்
புண்ணிய மிவைமுதல் வெள்ளுடற் கொடுக்கும் |
20
|
|
புகழ்க்கவிப்
பாடகர் புணர்ச்சியின் பகற்றி
யெல்லாக் கல்வியு மிகழ்ச்சிசெய் கலவியர்
பெருநகைக் கூட்டமுங் கழிவுசெய் திவ்விடை
மயக்குறு மாலை மாமக ளெதிர
வொருவழி படர்ந்த தென்னத் திருமுக |
25
|
|
மாயிர
மெடுத்து வான்வழி படர்ந்து
மண்ணே ழுருவி மறியப் பாயும்
பெருங்கதத் திருநதி யொருங்குழி மடங்க
வைம்பகை யடக்கிய வருந்தவ முனிவ
னிரந்தன வரத்தா லொருசடை யிருத்திய |
|
|
கூடற்
பெருமான் குரைகழல் கூறுஞ்
செம்மையர் போலக் கோடா
தெம்மைய நோக்கிச் சிறிதுகண் புரிந்தே. |