|
|
செய்யுள்
58
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
நிரையிதழ்
திறந்து மதுவண் டருந்தும்
விருந்துகொண் மலரும் புரிந்துறை மணமுஞ்
செந்தமிழ்ப் பாடலுந் தேக்கிய பொருளும்
பாலுஞ் சுவையும் பழமு மிரதமு
முடலு முயிரு மொன்றிய தென்னக் |
10
|
|
கண்டுந்
தெளிந்துங் கலந்தவுள் ளுணர்வாற்
பாலு மமுதமுந் தேனும் பிலிற்றிய
வின்பமர் சொல்லி நண்புமணக் கடவார்
விண்ணவர் தலைவனும் வீயா மருந்து |
15
|
|
மளகைக்
கிறையு மரும்பொரு ளீட்டமுங்
கண்ணனுங் காவலு முனியும் பசவு
மொன்றினுந் தவறா வொருங்கியைந் தனபோ
னீடிநின் றுதவுங் கற்புடை நிலையினர்
தவங்கற் றீன்ற நெடுங்கற் பன்னை |
20
|
|
முன்னொரு
நாளின் முதற்றொழி லிரண்டினர்
பன்றியும் பறவையு மென்றுரு வெடுத்துக்
கவையா வுளத்துக் காணுங் கழலுங்
கல்வியி லறிவிற் காணு முடியு
மளவுசென் றெட்டா வளவின ராகி |
25
|
|
மண்ணு
மும்பரு மகழ்ந்தும் பறந்து
மளவா நோன்மையி னெடுநாள் வருந்திக்
கண்ணினிற் காணா துளத்தினிற் புணராது
நின்றன கண்டு நெடும்பயன் படைத்த
திருவஞ் செழுத்துக் குறையா திரட்ட |
|
|
விருநில
முருவிய வொருதழற் றாணத்
தெரிமழு நவ்வி தமருக மமைத்த
நாற்கர நுதல்விழித் தீப்புகை கடுக்கள
முலகுபெற் றெடுத்த வொருதனிச் செல்வி |