திருக்கோவையார் 202 அம் செய்யுள்
ஆதங்கூறல்
அஃதாவது:
போக்கருமை கூறிய தலைவனுக்குத் தோழி பெருமானே! எம்பெருமாட்டி நின்னோடு போகப்பெறின்
அவளுக்கு வெஞ்சுரமுந் தண்சுரமாம்; ஆதலின் நீ அருமை கூறாது அவளை அழைத்துபோ! என்று
தலைவியின் ஆதரங் கூறாநிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:-
பிணையுங் கலையும்வன்
பேய்த்தே
ரினைப்பெரு நீர்நசையால்
அணையு முரம்பு நிரம்பிய
வத்தமு மையமெய்யே
இணையு மளவுமில் லாவிறை
யோனுறை தில்லைத்தண்பூம்
பணையுந் தடமுமன் றேநின்னொ
டேகினெம் பைந்தொடிக்கே.
|
"அழல்தடம் புரையும் அருஞ்சுர மதுவும் நிழல்தட மவட்கு நின்னொடேகி னென்றது"
(இ-ள்)
பிணையுங் கலையும் - பிணைமானும் கலைமானும்; பெநீர் நசையால்- மிகுந்த நீர்வேட்கையினால்;
வன்பேய்த் தேரினை அணையும் முரம்பு நிரம்பிய அத்தமும் - பெரிய பேய்த் தேரினைச்
சென்று அணுகும் முரம்பால் நிரம்பிய சுரமும்; ஐய-ஐயனே; நின்னோடு ஏகின் மெய்யே எம்
பைந்தொடிக்கு-நின்னோடு செல்லின் மெய்யாக எம்முடைய பசிய தொடியினையுடைய தலைவிக்கு;
இணையும் அளவும் இல்லா இறையோன் உறை தில்லைப்பும் தண்பணையும் தடமும் அன்றே - ஒப்பும்
எல்லையும் இல்லாத இறையோன் உறைகின்ற தில்லையின்கண்ணுள்ள பூக்களையுடைய மருதநிலமும்
பொய்கையும் அல்லவோ நீ இவ்வாறு கூறுவதென்னை என்க.
(வி-ம்.)
பிணை-பெண்மான். கலை-ஆண்மான். பேய்த்தேர்-கானல்நீர், நசை-வேட்கை. முரம்பு-கல்
விரவிய மேட்டு நிலம். அத்தம்-சுரம். இணை-ஒப்பு. பணை- மருதநிலம். நடம்-பொய்கை.
பைந்தொடி: அன்மொழித் தொகை. இது புகழாப் புகழ்ச்சி என்னும் அணி. மெப்பாடு - அழுகை.
பயன் - தலைமகள் நிலைமையுணர்த்துதல்.
|
|
செய்யுள்
56
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
|
|
நெடுவரைப்
பொங்கர்ப் புனமெறி காழகிற்
கடும்புகை வானங் கையுறப் பொதிந்து |
|