|
|
செய்யுள்
60
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
நிறைமதி
புரையாது நிறைமதி புரையாது
தேரான் றெளிவெனுந் திருக்குறட் புகுந்துங்
குறைமதி மனனே நிறைமதி புரையா
துவர்க்கடற் பிறந்துங் குறையுடற் கோடியுங்
கருங்கவைத் தீநாப் பெரும்பொறிப் பகுவாய்த் |
10
|
|
தழல்விழிப்
பாந்த டானிரை மாந்தியு
மிச்சி லுமிழ்ந்து மெய்யுட் கறுத்துந்
தணந்தோர்ச் சினந்து மணந்தோர்க் களித்துங்
குமுத மலர்த்தியுங் கமலங் குவித்துங்
கடல்சூ ழுடலகில் மதிநடு விகந்தும் |
15
|
|
பெருமறை
கூறி யறைவிதி தோறு
முத்தழற் குடையோன் முக்கட் கடவுளென்
றறுத்திடும் வழக்குக் கிடக்க வொருகால்
வான்வர நதிக்கரை மருண்மக மெடுத்த
தீக்குணத் தக்கன் செருக்களந் தன்னுட் |
20
|
|
காண்டொறும்
விசைத்த கருப்புத் தரளமும்
வளையுமி ழாரமுஞ் சுரிமுகச் சங்கும்
வலம்புரிக் கூட்டமுஞ் சலஞ்சலப் புஞ்சமு
நந்தினக் குழுவும் வளவயி னந்தி
யுழவக் கணத்தர் படைவா ணிறுத்தங் |
25
|
|
கூடற்
கிறையோன் குரைகழற் படையா
லீரெண் கலையும் பூழிபட் டுதிர
நிலனொடு தேய்ப்புண் டலமந் தலறியுஞ்
சிதைந்துறைந் தெழுபழித் தீமதி புரையாது
முண்டகம் விளர்த்தி முதிரா தலர்ந்து |
|
|
மமுதநின்
றுறைந்து மறிவறி வித்துந்
தீக்கதி ருடலுட் செல்லா திருந்துந்
திளையாத் தாரைகள் சேரா
முளையா வென்றி யவண்முக மதிக்கே. |