450கல்லாடம்[செய்யுள்60]



இளமதி என்றது குணகடலிற் றேன்றும் இளமைத் தன்மையுடைய நிறைத்திங்களை என்க. மெய்பபாடு - உவகை. பயன்-நயப்புணர்த்துதல்.

 
 

செய்யுள் 60

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நிறைமதி புரையாது நிறைமதி புரையாது
தேரான் றெளிவெனுந் திருக்குறட் புகுந்துங்
குறைமதி மனனே நிறைமதி புரையா
துவர்க்கடற் பிறந்துங் குறையுடற் கோடியுங்
கருங்கவைத் தீநாப் பெரும்பொறிப் பகுவாய்த்
10
  தழல்விழிப் பாந்த டானிரை மாந்தியு
மிச்சி லுமிழ்ந்து மெய்யுட் கறுத்துந்
தணந்தோர்ச் சினந்து மணந்தோர்க் களித்துங்
குமுத மலர்த்தியுங் கமலங் குவித்துங்
கடல்சூ ழுடலகில் மதிநடு விகந்தும்
15
  பெருமறை கூறி யறைவிதி தோறு
முத்தழற் குடையோன் முக்கட் கடவுளென்
றறுத்திடும் வழக்குக் கிடக்க வொருகால்
வான்வர நதிக்கரை மருண்மக மெடுத்த
தீக்குணத் தக்கன் செருக்களந் தன்னுட்
20
  காண்டொறும் விசைத்த கருப்புத் தரளமும்
வளையுமி ழாரமுஞ் சுரிமுகச் சங்கும்
வலம்புரிக் கூட்டமுஞ் சலஞ்சலப் புஞ்சமு
நந்தினக் குழுவும் வளவயி னந்தி
யுழவக் கணத்தர் படைவா ணிறுத்தங்
25
  கூடற் கிறையோன் குரைகழற் படையா
லீரெண் கலையும் பூழிபட் டுதிர
நிலனொடு தேய்ப்புண் டலமந் தலறியுஞ்
சிதைந்துறைந் தெழுபழித் தீமதி புரையாது
முண்டகம் விளர்த்தி முதிரா தலர்ந்து
  மமுதநின் றுறைந்து மறிவறி வித்துந்
தீக்கதி ருடலுட் செல்லா திருந்துந்
திளையாத் தாரைகள் சேரா
முளையா வென்றி யவண்முக மதிக்கே.