திருக்கோவையார் 145 ஆ செய்யுள்
மயிலோடு கூறி வரைவு கடாதல்
அஃதாவது:
பிரிவருமை கூறி வரைவு கடாவிய தோழி தலைவன் சிறைப்புறமாக வந்துழி அவன்வர வுணராதாள்போன்று
பிரிவாற்றாமையோடு தலைவியையும் அழைத்துக் கொண்டு அப்புனங்காவல் விட்டுச் செல்பவன்
மயிலை நோக்கி மயில்காள் யாங்கள் வருத்தத்தோடு இல்லிற்குச் செல்கின்றோம்:
யாங்கள் சென்றபின் இங்கு ஒருவர் வருவார். வந்தால், இங்கு நின்றும் போன மகளிர்கள்
அன்புடையார் துணியாதவற்றைத் துணிந்து போயினர் என்று அவர்க்குச் சொல்லுங்கோள்
என்று கூறி அவன் கேட்ப வரைவுகடாவியது. அதற்குச் செய்யுள்:
கணியார்
கருத்தின்று முற்றிற்
றியாஞ்சென்றுங் கார்ப்புனமே
மணியார் பொழில்காண் மறத்திற்கண்
டீர்மன்னு மம்பலத்தோன்
அணியார் கயிலை மயில்கா
ளயில்வே லொருவர்வந்தால்
துணியா தனந்துணிந் தாரென்னு
நீர்மைகள் சொல்லுமினே.
|
நீங்கரும் புனம்விடு நீள்பெருந் துயரம் பாங்கி பகர்ந்து பருவல லுற்றது.
(இ-ள்) கணியார்
கருத்து இன்று முற்றிற்று-காலக் கணிதராகிய வேங்கையாருடைய கருத்து இன்று நிறைவேறிற்று
ஆதலால்; யாம் சென்றும்-யாங்கள் இவ்விடத்தினின்றும் எம்மில்லிற்குப் போகின்றோம்;
கார்ப்புனமே-கரிய தினைப்புனமே; மணி ஆர் பொழில்காள்-மணிகள் நிரம்பிய பொழில்களே,
மறத்திர் கண்டீர்-அவ்வேங்கையாரொடு பயின்றீராகலின் நீயிர் எம்மை மாந்து விடுவீர்;
மன்னும் அம்பலத்தோன் அணி ஆர் இறைவனுடைய அழகுபொருந்திய கைலை மலையினின்றும் இங்கு
வந்துள்ள மயில்காள்; அயில்வேல் ஒருவர் வந்தால்-கூரிய தம்வேற்படையே தமக்குத் துணையாகத்
தமியே வரும் ஒருவர் இங்கு வந்தால்; துணியாதன துணிந்தார் என்னும் நீர்மைகள் சொல்லுமின்-அவர்க்கு
இங்கிருந்த மகளிர் அன்புடையார் துணியாதவற்றைச் செய்யத் துணிந்தார் என்னும் எம்
தன்மைகளைச் சொல்லுங்கள் என்க.
(வி-ம்.) கணியார்
என்றது வேங்கைமரத்தை. வேங்கை மலருங் காலமே தினை அரியுங் காலமாம். எனவே வேங்கை
மரம் மலர்ந்து
|