திருக்கோவையார் 358 ஆம் செய்யுள்
பள்ளியிடத்தூடல்
அஃதாவது:
வாயின் மறுத்த தலைமகள், ஆற்றாமையே வாயிலாகப் புக்குப் பள்ளியிடத்தானாகிய தலைமகனோடு,
நின்னை யிடைவிடாது நுகர்தற்கு முற்காலத்துத் தவத்தைச் செய்யாத தீவினையோமை நோவாது,
இன்றிவ்வாறாகிய நின்னை நோவதென்னோ அது கிடக்க, நின் காதலிமார் புறமேகற்று
நினக்குப் புதிதாகச் செய்த அப்புல்லுதலை யாஞ் செய்யமாட்டோம்; அதனாலெம்மைத் தொடாதே;
எங்கலையை விடுவாயாகவெனக் கலவி கருதிப் புலவாநிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:-
தவஞ்செய் திலாதவெந்
தீவினை
யேம்புன்மைத் தன்மைக்கெள்ளா
தெவஞ்செய்து நின்றினி யின்றுனை
நோவதெ னத்தன்முத்தன்
சிவன்செய்த சீரரு ளார்தில்லை
யூரநின் சேயிழையார்
நவஞ்செய்த புல்லங்கண் மாட்டேந்
தொடல்விடு நற்கலையே.
|
"பீடிவர் கற்பிற் றோடிவர் கோதை ஆடவன் றன்னோ டுடி யுரைத்தது"
(இ-ள்)
அத்தன் - உலகத்துள்ளாரெல்லார்க்குந் தந்தை; முத்தன்- இயல்பாகவே பாசங்களி னீங்கியவன்;
சிவன் - எவ்வுயிர்க்கும் எப்பொழுதும் நன்மையைச் செய்தலாற் சிவன்; செய்த சீர்
அருள் ஆர்தில்லை ஊர - அவனாற் செய்யப்பட்ட சீரியவருணிறைந்த தில்லையிலூரனே; தவம்
செய்திலாத வெம தீவினையேம்- முற்காலத்துத் தவத்தைச் செய்யாத வெய்ய தீவினையையுடைய
யாம்; புண்மைத் தன்மைக்கு எள்ளாது- நின்னாலாதிக்கப்படாத எமது புன்மைத் தன்மை காரணமாக
எம்மையே யிகழாது; எவம் செய்து நின்று இன்று இனி உனை நோவது என்- நினைக்குத் துன்பத்தைச்
செய்யாநின்று இப்பொழுது இனி நின்னை நோதலென்னாம்! அது கிடக்க; நின் சேயிழையார்
நவம் செய்த புல்லங்கள் மாட்டேம் -நின்னுடைய சேயிழையார் நினக்குப் புதிதாகச் செய்த
புல்லுதல்களையாம் செய்யமாட்டேம் அதனால்; நற்கரை தொடல் - எமது நல்ல மேகலையைத்
தொடாதொழி; விடு - விடுவாயாக என்றவாறு.
(வி-ம்.)
எவ்வம் எவமென நின்றது. காதலில்லையாயினுங் கண்ணோட்ட முடைமையான் இகழ்ந்து வாளாவிருப்ப
மாட்டாமையின், எம்புலவியான் நினக்குத் துன்பமாந் துணையேயுள்ள தென்னுங்
|