|
|
செய்யுள்
64
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
செங்கோற்
றிருவுடன் றெளிந்தறம் பெருக்கிய
மறுபுல வேந்த னுறுபடை யெதிர்ந்த
கொடுங்கோற் கொற்றவ னெடும்படை யனைத்துஞ்
சேர வறந்த திருத்தகு நாளி
லவன்பழி நாட்டு நடுங்குநற் குடிகள் |
10
|
|
கண்ணோடு
கண்ணிற் கழறிய போல
வொருவரி னொருவ ருள்ளத் தடக்கித்
தோன்றா நகையுடன் றுண்டமுஞ் சுட்டி
யம்ப றூற்று மிவ்வூ ரடக்கிக்
கடல்நிடந் தன்ன நிரைநிரை யாய |
15
|
|
வெள்ளமு
மற்றையர் கள்ளமங் கடந்து
தாயவர் மயங்குந் தனித்துயர் நிறுத்திப்
பறவை மக்களைப் பரியுநர்க் கொடுத்துக்
கிடைப்பல்வல் யானே நும்மைத் தலைத்தெழு
தாளியுங் கொன்றையுந் தழைத்தலின் முல்லையும் |
20
|
|
பாந்தளுந்
தரக்கும் பயிறலிற் குறிஞ்சியு
முடைத்தலை யெரிபொடி யுடைமையிற் பாலையு
மாமையுஞ் சலமு மேவலின் மருதமுங்
கடுவுஞ் சங்கமு மொளிர்தலி நெய்தலு
மாகத் தனது பேரருண் மேனியிற் |
25
|
|
றிணையைந்
தமைத்த விணையிலி நாயகன்
வருந்தொழி லனைத்தும் வளர்பெரும் பகலே
யெரிவிரிந் தன்ன விதழ்ப்பஃ றாமரை
யருண்முகத் திருவொடு மலர்முகங் குவிய
மரகதப் பாசடை யிடையிடை நாப்ப |
30
|
|
ணீலமு
மணியு நிரைகிடந் தென்ன
வண்டொடு குமுத மலர்த்திதழ் விரிப்பக்
குருகுஞ் சேவலும் பார்ப்புடன் வெருவிப்
பாசடைக் குடம்பை யூடுகண் படுப்பத்
துணையுடைன் சகோதரங் களியுடன் பெயர்ந்து |
|
|
விடுமமு
தருந்த விண்ணத் தணக்கச்
சுரிவளைச் சாத்து நிறைமதி தவழு |