474கல்லாடம்[செய்யுள்64]



 
 

செய்யுள் 64

நேரிசையாசிரியப்பா

 
   
5
  செங்கோற் றிருவுடன் றெளிந்தறம் பெருக்கிய
மறுபுல வேந்த னுறுபடை யெதிர்ந்த
கொடுங்கோற் கொற்றவ னெடும்படை யனைத்துஞ்
சேர வறந்த திருத்தகு நாளி
லவன்பழி நாட்டு நடுங்குநற் குடிகள்
10
  கண்ணோடு கண்ணிற் கழறிய போல
வொருவரி னொருவ ருள்ளத் தடக்கித்
தோன்றா நகையுடன் றுண்டமுஞ் சுட்டி
யம்ப றூற்று மிவ்வூ ரடக்கிக்
கடல்நிடந் தன்ன நிரைநிரை யாய
15
  வெள்ளமு மற்றையர் கள்ளமங் கடந்து
தாயவர் மயங்குந் தனித்துயர் நிறுத்திப்
பறவை மக்களைப் பரியுநர்க் கொடுத்துக்
கிடைப்பல்வல் யானே நும்மைத் தலைத்தெழு
தாளியுங் கொன்றையுந் தழைத்தலின் முல்லையும்
20
  பாந்தளுந் தரக்கும் பயிறலிற் குறிஞ்சியு
முடைத்தலை யெரிபொடி யுடைமையிற் பாலையு
மாமையுஞ் சலமு மேவலின் மருதமுங்
கடுவுஞ் சங்கமு மொளிர்தலி நெய்தலு
மாகத் தனது பேரருண் மேனியிற்
25
  றிணையைந் தமைத்த விணையிலி நாயகன்
வருந்தொழி லனைத்தும் வளர்பெரும் பகலே
யெரிவிரிந் தன்ன விதழ்ப்பஃ றாமரை
யருண்முகத் திருவொடு மலர்முகங் குவிய
மரகதப் பாசடை யிடையிடை நாப்ப
30
  ணீலமு மணியு நிரைகிடந் தென்ன
வண்டொடு குமுத மலர்த்திதழ் விரிப்பக்
குருகுஞ் சேவலும் பார்ப்புடன் வெருவிப்
பாசடைக் குடம்பை யூடுகண் படுப்பத்
துணையுடைன் சகோதரங் களியுடன் பெயர்ந்து
  விடுமமு தருந்த விண்ணத் தணக்கச்
சுரிவளைச் சாத்து நிறைமதி தவழு