மூலமும் உரையும்479



திருக்கோவையார் 173 ஆம் செய்யுள்
கடலிடைவைத்துத் துயரறிவி்த்தல்

     அஃதாவது: முதல்நா ளிரவு அல்லகுறிப் பட்டு வாளா மீண்டமையால் தலைவி அவ்விரவில் அடைந்த துன்பத்தைத் தலைவன் மறுநாளிரவு சிறைப்புறமாக அவனுக்குணர்த்தும் பொருட்டுத் தோழி கடலொடு கூறாநிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:-

சோத்துன் னடியமென் றோரைக்
     குழுமித்தொல் வானவர்சுழ்ந்
தேத்தும் படிநிற் பவன்றில்லை
     யன்னா ளிவடுவள
வார்த்துன் னமிழ்துந் திருவும்
     மதியு மிழந்தவநீ
பேர்த்து மிரைப்பொழி யாய்பழி
     நோக்காய் பெருங்கடலே.

எறிகடல் மேல்வைத் திரவரு துயரம் அறைக ழலவற் கறிய வுரைத்து

     (இ-ள்) பெருங்கடலே-பெரிய கடலே; ஆர்த்து உன் அமிழ்தும் திருவும் மதியும் இழந்து-முற்காலத்தே நீ நாவடக்கமின்றி இவ்வாறு ஆரவாரம் செய்து உன் அமிழ்தத்தையும் திருமகளையும் திங்களையும் இழந்து வைத்தும்; நீ பேர்த்தும் அவம் - நீ மீண்டும் ஒரு பயனும் இன்றி; சோத்து உன் அடியம் என்றோரை- எம்பெருமானே! சோத்தம் எளியம் உன் அடி யேங்கள் என்று ஒருகால் சொன்னவரையும்; தொல்வானவர் குழுமிச் சுழ்ந்து ஏத்தும்படி நிற்பவன்- பழையவராகிய தேவர்கள் கூடிப் பரிவாரமாய்ச் சுழ்ந்து நின்று ஏத்தும்படி என்றும் கூத்தாடி நிற்பவனாகிய இறைவனுடைய; தில்லை அன்னாள் இவள் துவள- திருத்தில்லையை யொத்த எம்பெருமாட்டி வாடும்படி; இரைப்பு ஒழியாய்- ஆரவாரித்தலை ஒழிகின்றிலை; பழி நோக்காய்!-காரணமின்றிப் பிறரை வருத்துதலால் வரும் பழியையும் நோக்குகின்றிலை ! நினைக்கிது நன்றோ என்க.

     (வி-ம்.) சோத்தம்-இழிந்தார் செய்யும் வணக்கம். அது சோத்துஎன நின்றது. சோத்தமடியம் என்பதும், அடியமெனிற் குழுமித் தொல்லை வானவர் என்பதும், குழீஇத் தொல்லை வானவர் சுழ்ந்து ஏத்தும்படி வைப்பவன் என்பதும் பாடம், திருவும் மதியும் என்பது செல்வமும் அறிவும் என வேறுபொருள் தோன்றவும் நின்றது,