486கல்லாடம்[செய்யுள்66]



வாட்டத்தின்க ணிருத்துவ தென்றுரைக்க, பயிர்ப்பு - பயிலாத பொருட்கண் வந்த அருவருப்பு ஈண்டுப் பயிலாத பொருள் பிரிவு. பிரிவுணர்த்தல் - அகன்றாற்றுவனோவெனப் பிரிவென்பது மொன்றுண்டென்பதுபட மொழிதல், மெய்ப்பாடு : அச்சத்தைச் சார்ந்த பெருமிதம், பயன் : பிரிவச்சமுணர்த்துதல்.

 
 

செய்யுள்

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நிலையுடைப் பெருந்திரு நேர்படு காலைக்
காலாற் றடுத்துக் கனன்றெதிர் கறுத்தும்
நனிநிறை செல்வ நாடுநன் பொருளு
மெதிர்பெறிற் கண்சிவந் தெடுத்தவை களைந்துந்
தாமரை நிதியும் வால்வளைத் தனமு
10
  மில்லம் புகுதரி லிருங்கத வடைத்து
மரியய னமரர் மலைவடம் பூட்டிப்
பெருங்கடல் வயிறு கிடங்கெழக் கடைந்த
வமுதமுட் கையி லுதவுழி யூற்றியு
மெய்யுல கிரண்டினுட் செய்குந ருளரே
15
  லெழுகதிர் விரிக்கு மணிகெழு திருந்திழை
நிற்பிரி வுள்ளு மனனுள னாகுவன்
முழுதுற நிறைந்த பொருண்மன நிறுத்திமுன்
வேடந் துறவா விதியுடைச் சாக்கிய
னருட்கரை காணா வன்பெனும் பெருங்கடல்
20
  பலநாட் பெரகி யொருநா ளுடைந்து
கரைநிலை யின்றிக் கையகன் றிடலு
மெடுத்தடை கன்மலர் தொடுத்தவை சாத்திய
பேரொளி யிணையாக் கூடன் மாமணி
குலமலைக் கன்னியென் றருள் குடி யிருக்கும்
25
  விதிநிறை தவறா வொருபங் குடைமையும்
பறவைசெல் லாது நெடுமுக டுருவிய
சேகரத் திறங்குந் திருநதித் துறையு
நெடும்பக லூழி நினைவுட னீந்தினு
மருங்கரை யிறந்த வாகமக் கடலு
30
 
மிளங்கோ வினர்க ளிரண்டறி பெயரு
மன்னமும் பன்றியு மொல்லையி னெடுத்துப்
பறந்து மகிழ்ந்து்ம் படியிது வென்னா