மூலமும் உரையும்497



மமையும். கானற்பொய்கையின் வனசம் கானலின் வனசமெனப்பட்டன. அலந்து கண்ணீர் வருமென்பது இருபொருட்டாகலின், மலர்ந்து கள்ளாகிய நீர் வருமென்றுரைக்க. இப்பொருட்டு அலர்ந்தென்பதிடைக் குறைந்து நின்றதாகக் கொள்க. கதிரோன் நம்மைப் பிரியவாற்றாது கடிது வரவேண்டுமென வனசங்கள் கை கூப்பா நின்றனவென்று அவற்றிற்கு இரங்கினாகவுடிரைப்பினு மமையும். அலர்ந்த வென்பது பாடமாயின். அலந்த வனசமென வியையும் மெய்ப்பாடு - அழுகை. பயன் - அயாவுயிர்த்தல்

 
 

செய்யுள்

நேரிசையாசிரியப்பா

 
   
5
  சிலைநுதற் கணைவிழித் தெரிவைய ருளமென
வாழ்ந்தகன் றிருண்ட நிரைநீர்க் கயத்து
ளெரிவிரிந் தன்ன பலவிதழ்த் தாமரை
நெடுமயல் போர்த்த வுடலொரு வேற்குக்
குருமணி கொழிக்கும் புனன்மலைக் கோட்டுழி
10
  நின்பதி மறைந்த நெட்டிர வகத்துட்
குருகும் புள்ளு மருகணி சூழத்
தேனொடும் வண்டொடுந் திருவொடுங் கெழுமிப்
பெருந்துயி லின்பம் பொருந்துபு நடுநாட்
காணுநின் கனலினுட் கவர்மனத் தவரைக்
15
  கொய்யுளைக் கடுமான் கொளுவிய தேரொடு
பூவுதிர் கானற் புறங்கண் டனனெனச்
சிறிதொரு வாய்மை யுதவினை யாயிற்
சேகரங் கிழித்த நிறைமதி யுடலங்
கலைகலை சிந்திய காட்சிய தென்னக்
20
  கடுமான் கீழ்ந்த கடமலைப் பன்மருப்
பெடுத்தெடுத் துந்தி மணிக்குலஞ் சிதறிக்
கிளைஞர்க ணச்சாப் பொருளினர் போலச்
சாதகம் வெறுப்பச் சரிந்தகழ்ந்த தார்த்துத்
திரள்பளிங் குடைத்துச் சிதறுவ தென்ன
25
  வழியெதிர் கிடந்த வுலமுடன் றாக்கி
வேங்கையும் பொன்னு மோருழித் திரட்டி
வரையர மகளிர்க் கணியணி கொடுத்துப்
பனைக்கைக் கடமா வெறுத்துறு பூழி
வண்டெழுந் தார்ப்ப மணியெடுத் தலம்பி