502கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் செய்யுள் 223
பதிபரிசுரைத்தல்

     அஃதாவது : நகர் காட்டிக்கொண்டு சென்று அந்நகரிடைப்புக்கு அவ்விடத்துள்ள குன்றுகள், வாவிகள், பொலில்கள், மாளிகைகள், தெய்வப்பதி யிவையெல்லாந்த தனித்தனி காட்டி, இதுகாண் நம்பதியாவதெனத் தலைமகளுக்குத் தலைமகள் பதிபரிசு காட்டாநிற்றல் என்றவாறு. அதற்குச்செய்யுள் :-

செய்குன் றுவையிவை சீர்மலர்
     வாலி விசும்பியங்கி
நைகின்ற திங்களெய்ப் பாறும்
     பொழிலவை ஞாங்கரெங்கும்
பொய்குன்ற வேதிய ரோதிட
     முந்திட மிந்திடமு
மெய்குன்ற வார்சிலை யம்பல
     வற்கிட மேந்திழையே.

கண்ணிவர் வளநகர் கண்டுசென் றடைந்து பண்ணியவர் மொழிக்குப் பதிபரி சுரைத்து.

     (இ-ள்) உவை செய்குன்று - உவைசெய்குன்றுகள் ; இவை சீர் மலர் வாவி- இவை நல்ல மலரையுடைய வாவிகள் ; அவை விசும்பு இயங்கி கைகின்ற திங்கள் எய்ப்பு ஆறும் பொழில் - அவை விசும்பின் கணியங்குதலான் வருந்துந் திங்கள் அயாவுயிர்க்கும் பொழில்கள் ; உந்திடம் ஞாங்கர் எங்கும் பொய்குன்ற வேதியர் ஓதிடம் - உவ்விடம் மிசை யெங்கு மூலகத்திற் பொய்முதலாகிய குற்றங்கெட மறையவர் மறைசொல்லுமிடம் ; பொய்முதலாகிய குற்றங்கெட மறையவன் மறைசொல்லுமிடம் ; ஏந்திழை - ஏந்திழாய் ; இந்திடமும் எய்குன்ற வார்சிலை அம்பலவற்கு இடம் - இவ்விடமும் எய்தற்குக் கருவியாகிய குன்றமாகிய நீண்ட வில்லையுடைய அம்பலவற்கிருப்பிடம் இத்தன்மைத்திவ்வூர் என்றவாறு.

     (வி-ம்.) இவையென்பது தன் முன்னுள்ளவற்றை, உவையென்பது முன்னின்றவற்றிற் சிறிது சேயவற்றை அவையென்பது அவற்றினுஞ் சேயவற்றை. முன் சொல்லப்பட்டவையே யன்றி இதனையுங் கூறுகின்றனென்பது கருத்தாகலின், இந்திடமுமென்னு மும்மை இறந்தது தழீஇயவெச்சவும்மை. உந்திடம் இந்திடமெனச் சுட்டீறு திரிந்து நின்றன. பண்ணிவர் மொழி - பண்போலு மொழி, மெய்ப்பாடு - பெருமிதம். பயன் - இடங்காட்டுதல்.

     செய்குன்றென்பது இயற்கை மலைத்தோற்றம் பொதுளச் செயற்கையாகச் செய்யப்படுவது.