|
|
செய்யுள்
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
எரிதெறற்
கரிய பொடிபொறுத் தியங்கினை
முகிறலை சுமந்த ஞிமிறெழுந் திசைக்கும்
பொங்கருட் படுத்த மலர்கால் பொருந்துக
கருங்கடத் தெதிர்ந்த கொடும்புலிக் கொதுங்கினை
வரியுடற் செங்கண் வராலின மெதிர்ப்ப |
10
|
|
வுழவக்
கணத்த ருடைவது நோக்குக
கொலைஞர் பொலிந்த கொடித்தேர்க் கணங்கினை
வேதியர் நிதிமிக விதிமக முற்றி
யவ்விர தத்துறை யாடுதல்ா கெழுமிப்
பொன்னுருள் வையம் போவது காண்க |
15
|
|
வாறலை
யெயின ரமர்க்கலிக்க ழுங்கினை
பணைத்தெழு சாலி நெருங்குபு புகுந்து
கழுநீர் களைஞர்தங் கம்பலை காண்க
தழறலைப் பழுத்த பரன்மரம் படுத்தனை
சுரிமுகக் குழுவளை நிலவெழச் சொரிந்த |
20
|
|
குளிர்வெண்
டரளக் குவாலிவை காண்க
வலகைநெட் டிரதம் புனலெனக் காட்டினை
வன்மீ னெடுங்கயல் பொதுவினை யகத்துக்
கிடங்கெனப் பெயிரிய கருங்கடல் காண்க
காகளம் பூசற் றுடியொலி யேற்றனை |
25
|
|
குடுமியஞ்
சென்னியர் கருமுகில் விளர்ப்பக்
கிடைமுறை யெடுக்கு மறையொலி கேண்மதி
யமரர்கண் முனிக்கணத் தவைமுன் றவறு
புரிந்துட னுமைகண் புதைப்பமற் றுமையு
மாடகச் சயிலச் சேகரந் தொடர்ந்த |
30
|
|
வொற்றையம்
பசுங்கழை யொல்கிய போல
வுலகுயிர்க் குயிரெணுந் திருவுரு வணைந்து
வளைக்கரங் கொடுகண் புதைப்பவவ் வுழியே
யுவகிரு டுரக்குஞ் செஞ்சுடர் வெண்சுடர்
பிரமனுட் பட்ட நிலவுயி ரனைத்துக் |
|
|
தமக்கெனக்
காட்டு மொளிக்கண் கெடுலு
மற்றவர் மயக்கங் கண்டவர் கண்பெறத் |