508கல்லாடம்[செய்யுள்



திருக்கோவையார் 278 ஆம் செய்யுள்
தேறாதுபுலம்பல்

     அஃதாவது : தலைமகனது வாய்மைகூறி வருத்தந் தணியாநின்ற தோழிக்கு, யானவர் கூறிய மொழியின்படியே மெய்ம்மையைக் கண்டு வைத்தும், என்நெஞ்சமு நிறையு்ம் என்வயமாய் நிற்கின்ற வில்லை ; அதுவேயுமன்றி, என்னுயிரும் வருத்தம் பொறுத்தற்கரிதாகாநின்றது. இவை யில்வா றாதற்குக் காரணம் யாதென்றறிகின் றிலேனெனத்தான்தேறாமை கூறிப் புலம்பாநிற்றல் என்றவாறு அதற்குச் செய்யுள் :-

மன்செய்த முன்னாண் மொழிவழியே
     யன்ன வாய்மைகண்டு
மென்செய்த நெஞ்சு நிறையு நில்
     வாவென நின்னுயிரும்
பொன்செய்த மேனியன் றில்லை
     யுறாரிற் பொறையரிதாம்
முன்செய்த தீங்குகொல் காலத்து
     நீர்மைகொன் மொய்குழலே.

தீதறு கண்ணி தேற்றத் தேறாது போதுறு குழலி புலம் பியது

     (இ-ள்) மொய் குழலே - மொய்த்த குழலையுடையாய் ; முன் நாள் மன்செய்வ மொழிவழியே அன்ன வாய்மை கண்டும் - முற்காலத்து மன்னன் நமக்குதவிய மொழியின் படியே அத்தன்மைத்தாகிய மெய்ம்மையைக் கண்டு வைத்தும் ; நெஞ்சும் நிறையும் நில்லா - என்னெஞ்சமும் நிறையு மென்வரையவாய் நிற்கின்றில்; என்செய்த-இவையென் செய்தன; எனது இன் உயிரும்- அதுவேயுமின்றி எனதினிய வுயிரும்; பொன் செய்த மேனியன்தில்லை உறாரின் பொறை அரிதாம்-பொன்னையொத்த மேனியையுடையவனது தில்லையை யுறாதாரைப்போல வருத்தம் பொறுத்தலரிதாகா நின்றது; முன் செய்த தீங்குகொல்- இவை யிவ்வாறாதற்குக் காரணம் யான் முன்செய்த தீவினையோ ; காலத்துநீர்மை கொல் - அன்றிப் பிரியுங்காலமல்லாத இக்காலத்தின் இயல்போ அறிகின்றிலன் என்றவாறு.

     (வி-ம்.) மொழிவழியே கண்டுமென வியையும். நெஞ்சநில்லாமையாவது நம்மாட்டு அவரதன்பு எத்தன்மைத்தோ வென்றையப்படுதல். நிறைநில்லாமையாவது பொறுத்தலருமையான் அந்நோய் புறத்தார்க்குப் புலனாதல், நில்லாதென்பது பாடமாயிற் றனித்தனி கூட்டுக. பொன்செய்த வென்புழிச் செய்தவென்பது உவமச் சொல். உயிர் துன்ப முழத்தற்குக் காரணமாதலின், அதனையுந் துன்பமாக