மூலமும் உரையும்509



நினைந்து இன்னுயிரும் பொறையரிதா மென்றான், மெய்ப்பாடு - மருட்கை, பயன் - ஆற்றுவித்தல்

 
 

செய்யுள்

நேரிசையாசிரியப்பா

 
   
5
  புட்பெயர்க் குன்றமு மெழுவகைப் பொருப்பு
மேல்கூடற் கவிழ்முகப் பொரியுடன் மாவு
நெடுங்கடற் பரப்பு மடுந்தொழி வரக்கரு
மென்னுளத் திருளு மிடைபுகுந் துடைத்த
மந்திரத் திருவேன் மதங்கெழு மயிலோன்
10
  குஞ்சரக் கொடியொடும் வள்ளியங் கொழுந்தொடும்
கூறாக் கற்பங் குறித்துநிலை செய்த
புண்ணியங் குமிழ்ந்த குன்றுடைக் கூட
னிறைந்துறை கறைமிடற் றறங்கெழு பெருமான்
போரு ளளித்த மாதவர் போல
15
  முன்னொரு நாளி லுடலுயிர் நீயென
வுள்ளங் கரிவைத் நுரைசெய்த வூரர்
தம்மொழி திரிந்து தவறுநின் றுளவே
லவர்குறை யன்றா லொருவன் படைத்த
காலக் குறிகொ வன்றியு முன்னைத்
20
  தியங்குட லீட்டிய கருங்கடு வினையாற்
காலக் குறியை மனந்தடு மாறிப்
பின்முன் குறித்தநம் பெருமதி யழகுகொ
னனவிடை நவிற்றக் கனவிடைக் கண்ட
வுள்ளெழு கலக்கத் துடன்மயங் கினமாற்
25
  குறித்தலிவ் விடைநிலை யொன்றே
மறிக்குலத் துழையின் விழிநோக் கினளே.

(உரை)
கைகோள் : களவு தலைவி கூற்று

துறை : தேறாதுபுலம்பல்

     (இ-ம்.) இதற்கு “மறைந்தவற் காண்டல்” (தொல், களவி, 20) எனவரும் நூற்பாவின்கள் ‘நொந்து தெளிவு ஒழிப்பினும்’ எனவரும் விதி கொள்க.