514கல்லாடம்[செய்யுள்71]



அன்னங்கள் தில்லைப்பொழில் நோக்கின எனக் கூட்டுக, ஆல் ; அசை, சேக்கை- கூடு, அகல் இருங்கழி ஓங்கு இருங்கழி எனத் தனித்தனி கூட்டுக. ஓங்குதல் - நீர் பெருகுதல் - கொழுமீன் - ஒருவகை மீனுமாம். மெய்ப்பாடு - அழுகை பயன் - அயாவுயிர்த்தல்.

 
 

செய்யுள்

நேரிசையாசிரியப்பா

 
   
5
  ஆயிரம் பணாடவி யாவுவா யணைத்துக்
கருமுகி னிறத்த கண்ணனிற் சிறந்து
நிலையுட லடங்கத் திருவிழி நிறைத்துத்
தேவர்நின் றிசைக்குந் தேவனிற் பெருகிக்
குருவளர் மரகதப் பறைதழை பரப்பி
10
  மணிதிரை யுகைக்குங் கடலினிற் கவினி
முள்ளெயிற் றரவ முறித்துயிர் பருகிப்
பொள்ளென வானத் தசனியிற் பொலிந்து
பூதமைந் துடையுங் காலக் கடையினு
முடறழை நிலைத்த மறமிக மயிலோன்
15
  புரந்தரன் புதல்வி யெயினர்தம் பாவை
யிருபா லிலங்க வுலகுபெற நிறைந்த
வருவியங் குன்றத் தணியணி கூடற்
கிறையவன் பிறையவன் கறைகெழு மிடற்றோன்
மலர்க்கழல் வழுத்துகங் காதவர் பாசறை
20
  முனைப்பது நோக்கிவேன் முனையவி ழற்றத்துப்
பெரும்பக லிடையே பொதும்பரிற் பிரிந்த
வளைகட் கூறாகிர்க் கூக்குரன் மொத்தையைக்
கருங்கட் கொடியினங் கண்ணறச் சூழ்ந்து
புகையுடல் புடைத்த விடவினை போல
25
  மனங்கடந் தேறா மதில்வளைத் தெங்குங்
கருநெருப் பெடுத்த மறமருண் மாலை
நின்வாற் கேவர் நல்குநர் ரின்வரல்
கண்டுட லிடைந்தன காட்டுவல் காண்மதி
மண்ணுடல் பசந்து கறுத்து விண்ணமு
  மாற்றா தழந்றுகாற் றின்முக மயங்கி
யுடுவெனக் கொப்பு ளுடனிறை பொடித்த
தீங்கிவற் றடங்கிய விருதிணை யுயிர்களுந்