மூலமும் உரையும்527



திருக்கோவையார் செய்யுள் 360
அயலறிவுரைத்தவ எழுக்கமெய்தல்

     அஃதாவது : தலைவிக்குப் பூப்பு நிகழ்ந்தமையைத் தலைவனுக்கு அறிவிக்கும் பொருட்டு இல்லத்தார் அவன்பால் செவ்வணி விடுக்கக் கருதினராக ; அதுகண்ட தலைவி அந்நிகழ்ச்சியினை அயலோர் அறிவதற்கு நாணினளாய் அந்தோ அயலார் முன்னே இவளால் தலைவன் இக்குறி அறிந்தவிடத்து ஒருத்தி அவனை நம்பால் அழைத்துவர அவனை நாம் எய்தும்படியாயிற்றே நம்முடைய பெண்தன்மை என வருந்திக் கூறா நிற்றல் என்றவாறு, அதற்குச் செய்யுள் :-

இரவணை யும்மதி யேர்நுத
     வார்நுதிக் கோலஞ்செய்து
குரவணை யுங்குழ லிங்கிவ
     ளாலிக் குறியறிவித்
தரவணை யுஞ்சடை யோன்றில்லை
     யூரனை யாங்கொருத்தி
தரவணை யும்பரி சாயின
     வாறுநந் தன்மைகளே.

உலகிய லறியச் செலவிட னுற்ற விழுத்தகை மாதர்க் கழுக்கஞ் சென்றது.

     (இ-ம்.) இரவு அணையும் மதி ஏர் நுதலார் நுதி - இரவினைச் சேருகின்ற பிறைபோலும் நுதலையுடைய பரத்தை மகளிரின் முன்னிலையில் ; கோலம் செய்து- செவ்வணியாகிய கோலத்தைச் செய்து; குரவு அணையும் குழல் இங்கு இவளால் இக்குறி அறிவித்து - குரவம்பூச் சேர்ந்த கூந்தலையுடைய இத்தேரிாயால் இந்தக் குறியை அறிவித்து ; அரவு அணையும் சடையோன் தில்லை ஊரனை - பாம்பு சேருஞ் சடையையுடைய கூத்தப் பெருமானுடைய திருத்தில்லையின்கண் எங்காதலனை; ஆங்கு ஒருத்தி தர - பின்னர் அப்பரத்தையின் இல்லின்கணுள்ள அவள் தோழி ஒருத்தி அவனை அழைத்துவந்து நமக்கு வழங்க; அணையும் பரிசு ஆயினவாறு நம் தன்மைகள் - நாம் அவனைச் சேரும்படி ஆயினவாறு என்னையோ நம்முடைய பெண் தன்மைகள் என்க.

     (வி-ம்.) இரவு அணையும் மதி என்றது இருண்ட கூந்தலின் கீழிருக்கும் நெற்றிக்குவமையாக என்க. நுதலார்-ஈண்டுப் பரத்தையர். நுதி - முன்னிலை, குரவு: ஆகுபெயர்; குரவம்பூ. குழல் இங்கிவள் என்றது தன்தோழியை. ஊரன் - தலைவன், ஆங்கொருத்தி என்றது பரத்தையின் தோழியை, மறைக்கத் தகுந்த இந்நிகழ்ச்சியை இவ்வாறு அயலார்க்கு அறிவிக்கும்படியும்