528கல்லாடம்[செய்யுள்73]



அறிவித்து அவனை எய்தும்படியும் நம் விதி ஆயிற்றே எனத் தலைவி இரங்கியபடியாம். பெண்தன்மைகள் கற்புமுதலாகப் பலவாகலின் தன்மைகள் எனப் பன்மை கூறினாள், மெய்ப்பாடு - அழுகை, பயன் - ஆற்றாமை நீங்குதல்.

 
 

செய்யுள் 73

நேரிசையாசிரியப்ப

 
   
5
  ஆடகச் சயிலத் தோருடல் பற்றிக்
கலிதிரைப் பரவையுங் கனன்றெழு வடவையு
மடியினு நடுவினு மணைந்தன போலப்
பசுந்தழைத் தோகையுஞ் செஞ்சிறைச் சேவலுந்
தாங்கியு மலர்க்கரந் தங்கியு நிலைத்த
10
  பேரொளி மேனியன் பாருயிர்க் கோருயிர்
மாவுடைக் கூற்ற மலரயன் றண்டங்
குறுமுனி பெருமறை நெடுமறை பெறாமுதல்
குஞ்சரக் கோதையுங் குறமகட் பேதையு
மிருந்தன விருபுறத் தெந்தையென் னமுதம்
15
  பிறந்தருள் குன்ற மொருங்குறப் பெற்ற
மாதவக் கூடன் மதிச்சடைக் கரண
னிருபதந் தேறா விருளுள மாமென
விவளுளங் கொட்ப வயலுளங் களிப்ப
வரும்பொருட் செல்வி யெனுந்திரு மகட்கு
20
  மானிட மகளிர் தாமுநின் றெதிர்ந்து
புல்லிதழ்த் தாமரை யில்லளித் தெனவு
முலகுவிண் பனிக்கு மொருசய மகட்குத்
தேவர்தம் மகளிர் செருமுக சேர்ந்து
வீரமங் கிந்தபின் விளிவது மானவு
25
  மிருளுட வரக்கியர் கலைமகட் கண்டு
தென்றமிழ் வடகலை சிலகொடுத் தெனவு
நீரர மகளிர் பரந்தளங் கன்னியர்க்
காரெரி மணித்திர ளருளிய தெனவுஞ்
செம்மலர்க் குழலிவன் போயறி வுறுத்தக்
  கற்றதுங் கல்லா துற்ற வூரனை
யவடர விவல்பெறு மரந்தையம் பேரினுக்
கொன்றிய வுவம மின்றிவ னுளவான்