திருக்கோவையார் 316 ஆம் செய்யுள்
பிரிந்தமை கூறல்
அஃதாவது:
தம்மை வந்தடைந்த வேந்தனுக்கு தாமுதவிசெய்வாராக வெய்ய போரையுடைய பாசறைமேல் நமர்
சென்றார் : இனியவ்வேந்தன் பகைவரா லிடப்பட்ட மதில் இன்றென்றாய் முடியுமோவெனத்
தலைமகள் வேந்தற்குற்றுழிப் பிரிந்தமைதோழி தலைமகளுக்குக் கூறாநிற்றல் என்றவாறு.
அதற்குச் செய்யுள் :-
போது குலாய புனைமுடி
வேந்தர்தம் போர்முனைமேல்
மாது குலாயமென் னோக்கிசென்
றார்நமர் வண்புலியூர்க்
காது குலாய குழையெழி
லோனைக் கருதலர்போ
லேதுகொ லாய்விளை கின்றதின்
றொனன்ா ரிடுமதிலே.
|
விறல்வேந்தர் வெம்முனைக்கண் திறல்வேந்தர் செல்வரென்றது.
(இ-ள்)
மாது குலாய மெல்நோக்கி - அழகுபொருந்திய மெல்லிய பார்வையினையுடையாய் ; போது குலாய
புனைமுடி வேந்தர் தம் போர்முனைமேல் -பூ அழகுபெற்ற ஒப்பனை செய்யப்பட்ட முடியையுடைய
வேந்தருடைய போரையுடைய பாசறை மேல் ; நமர்சென்றார் - நம்பெருமான் போயினர்; வண்புலியூர்க்காது
குலாய குழை எழிலோனைக் கருதலர்போல்-வளவிய புலியூரின்கண் எழுந்தருளியுள்ள செவியின்கண்
ஊசலாடா நின்ற குழையினாலுண்டாகிய அழகினையுடைய சிவபெருமானை நினையாத மடவோர்போல
; ஒன்னார் இடும் மதில் இன்று ஏதாய் விளைகின்றது - பகைவரால் இடப்பட்ட மதிலின்
நிலை இன்று என்னாய் முடியுமோ என்க.
(வி-ம்.)
போது குலாயமுடி, புனைமுடி எனத் தனித்தனி கூட்டுக. முடிவேந்தர் என்பது தலைமைப்பற்றிப்
பலர்பால் விகுதி பெற்ற ஒருமை, நோக்கி விளி, நினையாதவர் அழிவது போல ஒன்னார்
மதிலும் அழியும் என்பது கருத்து. ஏதுகொலாய் என்புழிக் கொல் ; அசைநிலை. துணிவுபற்றிச்
சென்றார் என இற்தகலத்தாற் கூறினாள். வினைமுடித்து கடிதுமீள்வர் என்பதுதோன்ற ஒன்னார்
இடுமதில் இன்றே அழியும் என்று கூறினாளாம். மெய்ப்ப்ாடு - அழுகையைச் சார்ந்த பெருமிதம்.
பயன் - வேந்தற்குற்றுழிப் பிரிவுணர்த்துதல்.
|
|
செய்யுள்
74
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
|
|
மலரவன்
பனிக்குங் கலினுங் குலமீ
னருகிய கற்புங் கருதியுண் ணடுங்கித் |
|