|
|
செய்யுள்
75
நேரியாசிரியப்பா
|
|
|
|
5
|
|
பெருந்துய
ரகற்றி யறங்குடி நாட்டி
யுளச்சுருள் விரிக்கு நலத்தகு கல்வியொன்
றுளதனக் குரிசி லொருமொழி சாற்றப்
பேழ்வாய்க் கொய்யுளை யரிசுமந் தெடுத்த
பன்மணி யாசனைத் திருந்துசெவ் வானி |
10
|
|
னெடுஞ்சடைக்
குறுஞ்சுடர் நீக்கியைந் தெடுக்கிய
வாறைஞ் நூறொடு வேறுநிரை யடுத்த
பன்மணி மிளிர்முடி பலர்தொழக் கவித்துப்
பஃறலைப் பாந்தட் சுமைதிருத் தோளிற்
றரித்துல களிக்குந் திருத்தகு நாளி |
15
|
|
னெடுநாட்
டிருவயிற் றருளுட னிருந்த
நெடுஞ்சடை யுக்கிரற் பயந்தரு ணிமலன்
மற்றவன் றன்னால் வடவையின் கொழுந்துசுட்
டாற்றா துடலமு மிமைக்குறு முத்தமும்
விளர்த்துநின் றணங்கி வளைக்குல முழங்குங் |
20
|
|
கருங்கடல்
பொரிய வொருங்குவேல் விடுத்த
வதற்கருள் கொடுத்த முதற்பெரு நாயகன்
வெம்மையுந் தண்மையும் வினையுடற் காற்று
மிருசுட ரொருசுடர் புணர்விழி யாக்கிமுன்
விதியவன் றரா வுடலொடு நிலைத்த |
25
|
|
முத்தமிழ்க்
கூடன் முதல்வன் பொற்றாள்
கனவினுங் காணாக் கண்ணிலர் துயரும்
பகுத்துண் டீகுநர் நிலைத்திரு முன்ன
ரில்வெனுந் தீச்சொ விறுத்தனர் தோமு
மனைத்துயி ரோம்பு மறத்தினர் பாங்கர்க் |
30
|
|
கோறவென்
றயவினர் குறித்தின குற்றமு
நன்றறி கவ்வியர் நாட்டுறு மொழிபுக்
கவ்வா ணிழந்தோர்க் கருவிட மாயது
மொருகணங் கூடி யொருங்கே
யிருசெவிப் புக்க தொத்தன விவட்கே. |