மூலமும் உரையும்545



 
 

செய்யுள் 76

நேரிசையாசிரியப்பா

 
   
5
  கடன்மக ளுள்வைத்து வடவைமெய் காயவு
மலைமக டழற்றரு மேனியொன் றணைக்கவு
மாசறு திருமகண் மலர்புகுந் தாயிரம்
புறவிதழ்ப் புதவடைத் ததன்வெதுப் புறுக்கவுஞ்
சயமகள் சீற்றத் தழன்மனம் வைத்துப்
10
  திணிபுகும் வென்றிச் செருவழல் கூடவு
மையர் பயிற்றிய விதியழ லோம்பவு
மவ்வனற் கமர ரனைவரு மணையவு
முன்னிடைக் காடன் பின்னெழ நடந்து
நோன்புறு விரதியர் நுகரவுள் ளிருந்தென்
15
  னெஞ்சக நிறைந்து நினைவினுண் மறைந்து
புரையறு மன்பினர் விழிபெறத் தோற்றி
வானவர் நெடுமுடி மணித்தொகை திரட்டிப்
பதுக்கைசெய் யம்பலத் திருப்பெரும் பதியினும்
பிறவாப் பேரூர்ப் பழநக ரிடத்து
20
  மகிழ்நடம் பேய்பெறும் வடவனக் காட்டினு
மருமறை முடியினு மடியவ ருளத்தினுங்
குனித்தரு ணாயகன் குலமறை பயந்தோ
னருந்தமிழ்க் கூடற் பெருந்தவர் காண
வெள்ளியம் பலத்துட் டுள்ளிய ஞான்று
25
  நெருப்பொடு சுழலவும் விருப்பெடுத் தவ்வழல்
கையினிற் கொள்ளவுங் கரியுரி மூடவு
மாக்கிய பனிப்பகைக் கூற்றிவை நிற்க
வாங்கவர் துயர்பெற வீன்றவென் னொருத்தி
புகல்விழு மன்பதற் கின்றி
  மகவினைப் பெறலாம் வரம்வேண் டினளே.

(உரை)
கைகோள்: கற்பு. தலைவன் கூற்று.

துறை: முன்பனிக்கு நொந்துரைத்தல்.

     (இ-ம்) இதற்கு, “அவன் அறிவு ஆற்ற அறியும் ஆகலின்” (தொல். கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண் ‘கிழவனை மகடூஉப்