புலம்ப பெரிதாகலின்
அலமரல் பெருகிய காமத்து மிகுதியும்..................... இடும்பையும் ஆகிய விடத்தும்;
எனவரும் விதிகொள்க.
1-6:
கடல்........................கூடவும்
(இ-ள்)
கடல் மகள் வடவை உள்வைத்து மெய்காயவும்-கடலாகிய பெண் இப்பனியினது குளிருக்கு ஆற்றாது
வடவைத் தீயைத் தன்னிடத்தே வைத்துக் கொண்டு உடல் காயவும்; மலைமகள் தழல்தரு மேனிஒன்று
அணைக்கவும்- பார்வதி இக்குளிருக் கஞ்சித் தீயைத் தருகின்ற இறைவனுடைய திருமேனியை
அணைத்துக் கொண்டிருக்கவும்; மாசு அறு திருமகள்-குற்றமற்ற திருமகள்; மலர் புகுந்து-இதற்கஞ்சித்
தாமரை மலரினுட் புகுந்து ஆயிரம் புற இதழ் புதவு அடைத்து-அதன் ஆயிரமாகிய புறவிதழ்களாகிய
கதவுகளை அடைத்துக் கொண்டு; அதன் வெதுப்புறுக்கவும்-அதனாலுண்டாகும் வெப்பத்தைப் பொருந்தவும்;
சயமகள் மனம் சீற்றத்தழல் வைத்து- வெற்றித்திருவாகிய கொற்றவையோ இப்பனிக்கஞ்சித்தன்
நெஞ்சினூடே சினத்தீயை வளர்த்துக் கொண்டு; திணிபுகும் வென்றி செரு அழல் கூடவும்-திண்மையால்
செல்லுதற்குரிய வெற்றியுள்ள போராகிய வெம்மையைப் பொருந்தவும் என்க.
(வி-ம்.)
கடல்மகள்-கடலாகிய பெண். வடவை-வடவைத்தீ. மெய்காத்தல்- மெய்யைக் காய்வித்தல்.
மலைமகள்-பார்வதி. தழல் தருமேனி-தீ வண்ணனாகிய இறைவன் திருமேனி. அவனுடைய எண்வகை
வடிவங்களுள் நெருப்பும் ஒன்றாகலின் தழல்தரு மேனி என்றாள். மலர்-ஈண்டுக் குறிப்பால்
தாமரை மலரை உணர்த்திற்று. புதவு-கதவு. அதனாலுண்டாகும் வெதுப்பு என்க. வெதுப்புறுத்தல்:
ஒரு சொல். அஃதாவது வெப்பமுண்டாக்கிக் கோடல் என்க. சயமகள் என்றது கொற்றவையை.
அவள் இப்பனிக் கஞ்சி உள்ளேயும் சீற்றத்தழல் வைத்துப் புறத்தேயும் செருஅழல் கூடினாள்
என்னும் நயமுணர்க. சீற்றத்தழல்-சினமாகிய தீ. திணி-திண்மை. செருஅழல்-போராகிய
நெருப்பு.
7-8:
ஐயர்..................அணையவும்
(இ-ள்)
ஐயர் பயிற்றிய விதி அழல்-மறையவர் தமக்குக் கற்பித்துள்ள விதிகளையுடைய வேள்வித்தீயினைச்
சார்ந்திருந்தது; ஓம்பவும்-இக்குளிருக்கு அஞ்சி அதனை வளர்ப்பவும்; அமரர் அனைவரும்-தேவர்கள்
எல்லோரும் தீக்காய்தற் பொருட்டு; அவ்வனற்கு அணையவும்-அந்த வேள்வித் தீயை விரும்பி
வந்து சேராநிற்பவும் என்க.
(வி-ம்.)
பயிற்றிய என்றது தம்மாசான் பயிற்றிய என்பதுபட நின்றது. ஐயர்-ஈண்டு மறையோர்.
ஐயர் தம்முடைய அறம் என்பது பற்றி அன்றியும் குளிருக்குத் தீக்காய்தற் பொருட்டும்
வேள்வித்
|