550கல்லாடம்[செய்யுள்77]



 
 

செய்யுள் 77

நேரிசையாசிரியப்பா

 
   
5
  மருவளர் குவளை மலர்ந்துமுத் தரும்பிப்
பசுந்தாட் டோன்றி மலர்நனி பறித்து
நெட்டெறி யூதை நெருப்பொடு கிடந்து
மணிப்புறங் கான்ற புரிவளை விம்மி
விதிப்பவன் விதியா வோவநின் றெனவென்
10
  னுள்ளமுங் கண்ணு நிலையுறத் தழீஇயின
னுவணக் கொடியின னுந்திமலர் தோன்றிப்
பார்முதற் படைத்தவ னடுத்தலை யறுத்துப்
புனிதக் கலனென வுலகுதொழக் கொண்டு
வட்டமுக் கோணஞ் சதுரங் கார்முக
15
  நவத்தலைத் தாமரை வளைவாய்ப் பருந்தெனக்
கண்டன மகந்தொறுங் கலிபெறச் சென்று
நறவிரந் தருளிய பெரியவர் பெருமான்
கூக்குரல் கொள்ளக் கொலைதரு நவ்வியும்
விதிரொளி காற்றக் கனல்குளிர் மழுவு
20
  மிருகரந் தரித்த வொருவிழி நுதலோன்
கூடலொப் புடையாய் குலவுடுத் தடவுந்
தலைமதில் வயிற்றுட் படுமவ ருயிர்க்கணந்
தனித்தனி யொளித்துத் தணக்கலு மரிதெனப்
போக்கற வளைந்து புணரிரு ணாளுங்
  காவற் காட்டின வழியுந்
தேவர்க் காட்டும் பாசறை யினமே.

(உரை)
கைகோள்: கற்பு. தலைவன் கூற்று

துறை: மறவாமை கூறல்.

     (இ-ம்) இதற்கு, “கரணத்தின் அமைந்து முடிந்த காலை” (தொல். கற்பி-5) எனவரும் நூற்பாவின்கண் ‘காமக்கிழத்தி மனையோள் என்று இவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரும் எனவரும் விதிகொள்க.

7-13: உவண.....................பெருமான்

     (இ-ள்) உவணக்கொடியினன் உந்திமலர் தோன்றி- கருடக்கொடியையுடைய திருமாலினது திருவுந்தித்தாமரை