திருக்கோவையார் 390 ஆம் செய்யுள்
அணைந்தவழியூடல்
அஃதாவது:
தோழியாலூடல் தணிவிக்கப்பட்டுப் பள்ளியிடத்தாளாகிய தலைமகள், நீ செய்கின்றவிதனையறியின்
நின் காதலிமார் நின்னை வெகுள்வர்; அதுகிடக்க, யாம் மேனிமுழுதுஞ் சிறுவனாலுண்டாக்கப்பட்ட
பால்புலப்படுந் தன்மையையுடையேம்; அதன்மேல் யாமும் நீ செய்கின்றவிக் கள்ளத்தை
விரும்பேம்; அதனால் எங்காலைத் தொடாதொழி; எங்கையை விடுவாயாக எனத் தலைமகன்
றன்னை யணைந்தவழி ஊடா நிற்றல். அதற்குச் செய்யுள்:-
சேறான் றிகழ்வாயற்
சிற்றம்
பலவர்தில் லைநகர்வாய்
வேறான் றிகழ்கண் ணிளையார்
வெகுள்வர்மெய்ப் பாலன்செய்த
பாறான் றிகழும் பரிசின
மேவும் படிறுவவேங்
காறான் றொடறொட ரேல்விடு
தீன்டலெங் கைத்தலமே.
|
தெளிபுன லூரன் சென்றணைந் தவழி ஒளிமதி நுதலி யூடி யுரைத்தது.
(இ-ள்)
சேல் திகழ் வயல்-சேல் விளங்கும் வயலையுடைய; சிற்றம்பலவர் தில்லை நகர்வாய் வேல்
திகழ்கண் இளையார்-சிற்றம்பலவரது தில்லை நகரிடத்துளராகிய வேல்போலுங் கண்ணையுடைய
நின் காதலிமாராகிய விளையவர்; வெகுள்வர்-நீ செய்கின்ற விதனை யறியின் நின்னை
வெகுள்வர், அதுவேயுமன்றி; மெய் பாலன் செய்த பால் திகழும் பரிசினம்-மேனி சிறுவனாலுண்டாக்கப்பட்ட
பால்புலப்படுந் தன்மையையுடையேமாதலின் நினைக்குத் தகேம்; மேவும் படிறு உவவேம்-இதன்மேலே
யாமும் நீயும் மேவி நாணின்மையோடு கூடிய கள்ளத்தை விரும்பேம்; கால்தொடல்-அதனால்
எங்காலைத் தொடாதொழி; தொடரேல்-எம்மைத் தொடரவேண்டா; எம் கைத்தலம் தீண்டல்-எங்கைத்தலத்தைத்
தீண்டற்பாலையல்லை; விடு-விடுவாயாக என்க.
(வி-ம்.)
திகழ்வயற்றில்லையென வியையும். பால் திகழுமென்னும் இடத்துநிகழ்பொருளின்வினை மெய்யாகிய
விடத்துமேலேறி நின்றது. நான் கிடத்தும் தானென்பது அசைநிலை. பரிசினமேனு மென்பதூஉம்
பாடம். மெய்ப்பாடு-வெகுளி. பயன்-ஊடநீங்குதல்.
|