|
|
செய்யுள்
78
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
மதியமுடல்
குறைந்த வெள்ளாங் குருகினம்
பைங்கா றடவிச் செங்கய றுரந்துண்டு
கழுக்கடை யன்னதங் கூர்வாய்ப் பழிப்புல
வெழின்மதி விரித்தவெண் டளையிதழ்த் தாமரை
மலர்மலர் துவட்டும் வயலணி யூர |
10
|
|
கோளகைக்
குடிலிற் குனிந்திடைந் தப்புறத்
திடைநிலை யற்ற படர்பெரு வெளியகத்
துடன்முடக் கெடுத்த தொழில்பெறு வாழ்க்கைக்
கவைத்தலைப் பிறையெயிற் றிருளெழி லரக்க
னமுதமுண் டிமையா தவருமங் கையருங் |
15
|
|
குறவருங்
குறவத் துணையரு மாகி
நிலம்பெற் றிமைத்து நெடுவரை யிரும்பிடைப்
பறவையுண் டீட்டிய விறானற வருந்தி
யந்நிலத் தவரென வடிக்கடி வணங்கும்
வெள்ளியங் குன்றக முள்ளுறப் புகுந்தொரு |
20
|
|
தேவனு
மதன்முடி மேவு முளனா
மெனப்புயங் கொட்டி நகைத்தெடுத் தார்க்கப்
பிலந்திறந் தன்ன பெருவா யொருபது
மலைநிரைத் தொழுக்கிய கரமிரு பத்தும்
விண்ணுடைத் தரற்றவுந் திசையுட்க முரியவுந் |
25
|
|
தாமரை
யகவயிற் சேயிதழ் வாட்டிய
திருவடிப் பெருவிரற் றலைநக நுதியாற்
சிறிதுமலை யுறுத்த மதிமுடி யந்தணன்
பொன்னணி மாடம் பொலிநகர்க் கூட
லாவண விதி யனையவ ரறிவுறி |
|
|
னூருணி யன்னநின் மார்பகந் தோய்ந்தவென்
னிணைமுலை நன்ன ரிழந்தன வதுபோன்
மற்றவர் கவைமன மாழ்கிச்
செற்றநிற் பகர்வரிக் காறீண் டலையே. |