560கல்லாடம்[செய்யுள்79]



 
 

செய்யுள் 79

நேரிசையாசிரியப்பா

 
   
5
  உலர்கவட் டோமைப் பொரிசினைக் கூகையும்
வீசுகோட் டாந்தையுஞ் சேவலோ டலமரத்
திரைவிழிப்பருந்தினம் வளையுகிர்ப் படையாற்
பார்ப்பிரை கவரப் பயனுற முலகிற்
கடனறும் யாக்கைக் கவர்கடன் கழித்துத்
10
  தழலுணக் கொடுத்த வதனுண விடையே
கைவிளக் கெடுத்துக் கரையினங் கரையப்
பிணம்பிரித் துண்ணுங் குணங்கினங் கொடுப்பச்
சூற்பே யேற்ப விடாகினி கரப்பக்
கண்டுளந் தளிர்க்குங் கருணையஞ் செல்வி
15
  பிறைநுத னாட்டி கடுவளர் கண்டி
யிறானற வருவி யெழுபரங் குன்றத்
துறைசூர்ப் பகையினற் பெறுதிரு வயிற்றின
ளொருபாற் பொலிந்த வுயர்நகர்க் கூடற்
கடுக்கையஞ் சடையினன் கழலுளத் திலர்போற்
20
  பொய்வரு மூரன் புகவரு மிற்புக
வென்னுளஞ் சிகைவிட் டெழுமனற் புக்க
மதுப்பொழி முளரியின் மாழ்கின தென்றாற்
றோளிற் றுவண்டுந் தொங்கலுண் மறைந்துந்
தைவர லேற்றுங் கனவினுந் தடைந்துந்
25
  திரைகடற் றெய்வமுன் றெளிசூள் வாங்கியும்
பொருட்கான் றடைந்தும் பாசறைப் பொருந்தியும்
போக்கருங் கடுஞ்சுரம் போகமுன் னிறந்துங்
காவலிற் கவன்றுங் கல்வியிற் கருதியும்
வேந்துவிடைக் கணங்கியும் விளைபொருட் குருகிய
  நின்ற விவட் கினி யென்னாங்
கன்றிய வுடலுட் படுநனி யுயிரே.

(உரை)
கைகோள்: கற்பு. தோழி கூற்று

துறை: பொறையுவந்துரைத்தல்.

     (இ-ம்) இதனை, “பெறற்கரும் பெரும் பொருள்” (தொல். கற்பி. 9) எனவரும் நூற்பாவின்கண் பிற என்பதனாலமைத்துக் கொள்க.