|
|
செய்யுள்
79
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
உலர்கவட்
டோமைப் பொரிசினைக் கூகையும்
வீசுகோட் டாந்தையுஞ் சேவலோ டலமரத்
திரைவிழிப்பருந்தினம் வளையுகிர்ப் படையாற்
பார்ப்பிரை கவரப் பயனுற முலகிற்
கடனறும் யாக்கைக் கவர்கடன் கழித்துத் |
10
|
|
தழலுணக் கொடுத்த வதனுண விடையே
கைவிளக் கெடுத்துக் கரையினங் கரையப்
பிணம்பிரித் துண்ணுங் குணங்கினங் கொடுப்பச்
சூற்பே யேற்ப விடாகினி கரப்பக்
கண்டுளந் தளிர்க்குங் கருணையஞ் செல்வி |
15
|
|
பிறைநுத னாட்டி கடுவளர் கண்டி
யிறானற வருவி யெழுபரங் குன்றத்
துறைசூர்ப் பகையினற் பெறுதிரு வயிற்றின
ளொருபாற் பொலிந்த வுயர்நகர்க் கூடற்
கடுக்கையஞ் சடையினன் கழலுளத் திலர்போற் |
20
|
|
பொய்வரு மூரன் புகவரு மிற்புக
வென்னுளஞ் சிகைவிட் டெழுமனற் புக்க
மதுப்பொழி முளரியின் மாழ்கின தென்றாற்
றோளிற் றுவண்டுந் தொங்கலுண் மறைந்துந்
தைவர லேற்றுங் கனவினுந் தடைந்துந் |
25
|
|
திரைகடற் றெய்வமுன் றெளிசூள் வாங்கியும்
பொருட்கான் றடைந்தும் பாசறைப் பொருந்தியும்
போக்கருங் கடுஞ்சுரம் போகமுன் னிறந்துங்
காவலிற் கவன்றுங் கல்வியிற் கருதியும்
வேந்துவிடைக் கணங்கியும் விளைபொருட் குருகிய |
|
|
நின்ற விவட் கினி யென்னாங்
கன்றிய வுடலுட் படுநனி யுயிரே. |