566கல்லாடம்[செய்யுள்80]



 
 

செய்யுள் 80

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நிலைநீர் மொக்குளின் விளைவாய்த் தோன்றி
வான்றவ ழுடற்கறை மதியெனச் சுருங்கிப்
புல்லர்வாய்ச் சூளெனப் பொருளுட னழியுஞ்
சீறுண வின்பத் திருந்தா வாழ்க்கையைக்
கான்றிடு சென்றியிற் கண்டரு வருத்துப்
10
  புலனறத் துடைத்த நலனுறு கேள்வியர்
ஆரா வின்பப் பேரமு தருந்தித்
துறவெனுந் திருவுட னுறவுசெய் வாழ்க்கையர்
வாயினுங் கண்ணினு மனத்தினு மகலாப்
பேரொளி நாயகன் காரொளி மிடற்றோன்
15
  மண்டிரு வேட்டுப் பஞ்சவற் பொருத
கிள்ளியுங் கிளையுங் கிளர்படை நான்குந்
திண்மையுஞ் செருக்குந் தோற்றமும் பொன்றிட
வெரிவா யுரக ரிருணாட் டொருவக்
கொலைகொண் டாழி குறியுடன் படைத்து
20
  மறியப் புதைத்த மறங்கெழு பெருமான்
நீர்மாக் கொன்ற சேயோன் குன்றமுங்
கல்வியுந் திருவுங் காலமுங் கொடியு
மாடமு மோங்கிய மணிநகர்க் கூடல்
ஆல வாயினு ளருளுட னிறைந்த
25
  பவளச் சடையோன் பதந்தலை சுமந்த
நல்லிய லூராநின் புல்லமுண் மங்கைய
ரோவிய வில்லமெம் முறையு ளாகக்
கேளாச் சிறுசொற் கிளக்குங் கலதியர்
இவ்வுழி யாயத் தினர்களு மாக
30
  மௌவலிதழ் விரிந்து மணஞ்சூழ் பந்தர்செய்
முன்றிலு மெம்முடை முன்றி லாக
மலர்ச்சுமைச் சேக்கை மதுமலர் மறுத்தவித்
திருமனங் கொள்ளாச் சேக்கைய தாக
நின்னுளங் கண்டு நிகழுண வுன்னி
  நாணா நவப்பொய் பேணியுட் புணர்த்தி
யாழொடு முகமன் பாணனு நீயுந்