மூலமும் உரையும்573



அசைநிலை. எல்லாரையு மாளும் பொதுவாகிய முறைமையினின்று நீக்கி என்னை யுளநெகிழ்விப்பதோ ருபாயத்தாண்டவனென் றுரைப்பினும் அமையும். இன்பஞ் செய்வதுந் துன்பஞ்செய்வது மொன்றாக மாட்டாதென்னுங் கருத்தால் புலியூரரன் பொருப்பே யிதுவெனிலென்றான.் அறையீண்டருவிகாள் நீரென்னுற்றீரென்றும், அறையீண்டருவிப் புனமென்றும் உரைப்பாரு முளர். மெய்ப்பாடு-அழுகை. பயன்-ஆற்றாமை நீங்குதல்.

 
 

செய்யுள் 81

நேரிசையாசிரியப்பா

 
   
5
  உள்ளிருந் தெழுந்து புறம்புநின் றெரியு
மளவாத் திருமணி யளித்த லானுங்
கொலைமுதிர் கடமான் முதிர்முகம் படர்ந்து
கொழுஞ்சினை மொடைந்து குளிரொடு பொதுளிய
நெடுமரத் திளங்கா நிலைத்த லானும்
10
  பாசடை யும்பர் நெடுஞ்சுனை விரிந்த
பேரிதழ்த் தாமரை பெருக லானு
நெடுவிசும் பணவும் பெருமதி தாங்கி
யுடையா வமுத முறைத லானு
மிளமையுந் தொங்கலு மின்பமு மொருகால்
15
  வாடாத் தேவர்கண் மணத்த லானும்
நூறுடை மகத்திற் பேறுகொண் டிருந்த
புரந்தரன் போலும் பொன்னெயி லெறிந்த
மணிவேற் குமரன் றிருவளர் குன்றம்
பேரணி யுடுத்த பெருநகர்க் கூடல்
20
  கோயில்கொண் டிருந்த குணப்பெருங் குன்ற
மருந்தவக் கண்ணினோ டடைந்தமா முனிபாற்
பேரிருண் மாயைப் பெண்மக விரக்க
வுவர்முதல் கிடந்த சுவையே ழமைத்துக்
கொடுத்தமெய்ப் பிண்டக் குறியுடன் றொன்றிய
25
  வெழுநிறச் சகரர்க ளேழணி நின்று
மண்புக மூழ்கிய வான்பரி பிணிக்கப்
பன்முக விளக்கிற் பரிதியிற் றோட்டிய
வேலைக் குண்டகழ் வயிறலைத் தெழுந்த
பெருங்கார்க் கருங்கடு வரும்பிய மிடற்றோ
  னெறிந்துவீ ழருவியு மெரிமணி யீட்டமு