மூலமும் உரையும்581



 
 

செய்யுள் 82

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வடமொழி விதித்த விசைநூல் வழக்குட
னடுத்தன வெண்ணான் கங்குலி யகத்தினு
நாற்பதிற் றிரட்டி நாலங் குலியினுங்
குறுமையு நெடுமையுங் கோடல் பெற்றைதா
யாயிரந் தந்திரி நிறைபொது விசித்துக்
10
  கோடி மூன்றிற் குறித்துமணி குயிற்றி
யிருநிலங் கிடத்தி மனங்கரங் கதுவ
வாயிரத் தெட்டி லமைந்தன பிறப்புப்
பிறவிப் பேதத் துறையது போல
வாரியப் பதங்கொ ணாரதப் பேரியாழ்
15
  நன்னர்கொ ளன்பா னனிமுகம் புலம்ப
முந்நான் கங்குலி முழுவுடற் சுற்று
மைம்பதிற் றிரட்டி யாறுடன் கழித்த
வங்குலி நெடுமையு மமைத்துட் டூர்ந்தே
யொன்பது தந்திரி யுறுத்திநிலை நீக்கி
20
  யறுவாய்க் காயிரண் டணைத்துவரை கட்டித்
தோள்கால் வதிந்து தொழிற்படத் தோன்றுந்
தும்புருக் கருவியுந் துன்னிநின் றிசைப்ப
வெழுவென வுடம்புபெற் றெண்பதங் குலியின்
றந்திரி நூறு தழங்கிய முகத்த
25
  கீசகப் பேரியாழ் கிளையுடன் முரல
நிறைமதி வட்டத்து முயலுரி விசித்து
நாப்ப ணொற்றை நரம்பு கடிப்பமைத்
தந்நரம் பிருபத் தாறங் குலிபெற
விடக்கரந் துவக்கி யிடக்கீ ழமைத்துப்
30
  புறவிரன் மூன்றி னுனிவிர லகத்து
மறுபத் திரண்டிசை யனைத்துயிர் வணங்கு
மருத்துவப் பெயர்பெறும் வானக் கருவி
தூங்கலுந் துள்ளலுந் துவக்கிநின் றிசைப்ப
நான்முகன் முதலா மூவரும் போற்ற
  முனிவரஞ் சலியுடன் முகம னியம்பத்
தேவர்க ளனைவருந் திசைதிசை யிறைஞ்ச