|
|
செய்யுள்
83
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
கடுவினை
யங்குரங் காட்டியுள் ளழுக்கா
றெண்டிசைச் சாகைகொண் டிருண்மனம் பொதுளிக்
கொடுங்கொலை வடுத்துக் கடும்பழிச் சடையலைந்
திரண்டைஞ் ஞூறு திரண்டவக் காவதஞ்
சுற்றுடல் பெற்றுத் துணைப்பதி னாயிர |
10
|
|
மற்றது நீண்டு மணியுடற் போகி
யைம்பது நூறுட னகன்றுசுற் றொழுக்கிப்
பெருங்கள விணர்தந் தவைகீழ்க் குலவிய
விடமாக் கொன்ற நெடுவேற் குளவன்
குன்றமர் வள்ளியங் கொடியொடு துவக்கிப் |
15
|
|
பன்னிரு கண்விழித் தென்வினை துரக்கு
மருட்பரங் குன்ற முடுத்தணி கூடற்
குறும்பிறை முடித்த நெடுஞ்சடை யொருத்தனைத்
தெய்வங் கொள்ளார் சிந்தைய தென்னக்
கிடந்தவல் லிரவிற் கிளர்மழை கான்ற |
20
|
|
வயலு மும்பரு மடக்குபுன லொருவித்
தேவருள் கல்லார் சிந்தையிற் புரண்ட
கவலையுங் காற்குறி கண்டுபொழிற் றுள்ளு
மிமையாச் சூரும் பலகண் டொருங்காத்
துடியிற் கண்ணிற் றுஞ்சாக் கண்ணினர் |
25
|
|
கடியுந் துனைவிற் கையகன் றெரிமணித்
தொகையிருள் கொல்லு முன்றிற் பக்கத்
திணைமுகப் பறையறை கடிப்புடைத் தோகை
வயிற்று ளடக்கி வளைக்கிடை கிடக்கு
முழக்கிமெய் கவரு முகக்கொலை ஞாளி |