590கல்லாடம்[செய்யுள்83]



“அச்சம் பயமிலி காலம் பெருமையென்று
 அப்பால் நான்கே கொன்னைச் சொல்லே”   (தொல். இடை. 6)

என்னும் நூற்பாவானும் உணர்க. கொல் நிறவேல் எனக்கொள்ளினுமாம். ஞானி-நாய். குரைதரும்-ஒருசொல். மெய்ப்பாடு: அழுகை. பயன்-தலைமகன் கேட்பின் வரைதல், தோழி கேட்பின் வரைவு கடாவுதல். யாரும் கேட்பாரில்லையாயின் அயாவுயிர்த்துத் தானே ஆற்றுதல் என்க.

 
 

செய்யுள் 83

நேரிசையாசிரியப்பா

 
   
5
  கடுவினை யங்குரங் காட்டியுள் ளழுக்கா
றெண்டிசைச் சாகைகொண் டிருண்மனம் பொதுளிக்
கொடுங்கொலை வடுத்துக் கடும்பழிச் சடையலைந்
திரண்டைஞ் ஞூறு திரண்டவக் காவதஞ்
சுற்றுடல் பெற்றுத் துணைப்பதி னாயிர
10
  மற்றது நீண்டு மணியுடற் போகி
யைம்பது நூறுட னகன்றுசுற் றொழுக்கிப்
பெருங்கள விணர்தந் தவைகீழ்க் குலவிய
விடமாக் கொன்ற நெடுவேற் குளவன்
குன்றமர் வள்ளியங் கொடியொடு துவக்கிப்
15
  பன்னிரு கண்விழித் தென்வினை துரக்கு
மருட்பரங் குன்ற முடுத்தணி கூடற்
குறும்பிறை முடித்த நெடுஞ்சடை யொருத்தனைத்
தெய்வங் கொள்ளார் சிந்தைய தென்னக்
கிடந்தவல் லிரவிற் கிளர்மழை கான்ற
20
  வயலு மும்பரு மடக்குபுன லொருவித்
தேவருள் கல்லார் சிந்தையிற் புரண்ட
கவலையுங் காற்குறி கண்டுபொழிற் றுள்ளு
மிமையாச் சூரும் பலகண் டொருங்காத்
துடியிற் கண்ணிற் றுஞ்சாக் கண்ணினர்
25
  கடியுந் துனைவிற் கையகன் றெரிமணித்
தொகையிருள் கொல்லு முன்றிற் பக்கத்
திணைமுகப் பறையறை கடிப்புடைத் தோகை
வயிற்று ளடக்கி வளைக்கிடை கிடக்கு
முழக்கிமெய் கவரு முகக்கொலை ஞாளி