மூலமும் உரையும்601



 
 

செய்யுள் 85

நேரிசையாசிரியப்பா

 
   
5
  பழுதறு தெய்வங் காட்டப் பண்டையி
னுழுவ னலத்தா லோருயி ரென்றுங்
கடுஞ்சூ டந்துங் கைபுனை புனைந்தும்
பூழியம் போனகம் பொதுவுட னுண்டுங்
குழமகக் குறித்துச் சிலமொழி கொடுத்துங்
10
  கையுறை சுமந்துங் கடித்தழை தாங்கியு
முயிரிற் றளர விரங்கியு முணங்கியும்
பனையுங் கிழியும் படைக்குவ னென்று
மிறடியஞ் சேவற் கெறிகவண் கூட்டியும்
புனமுமெம் முயிரும் படர்கரி தடிந்து
15
  மழுங்குறு புனலெடுத் தகிற்புகை யூட்டியு
மொளிர்மணி யூசல் பரியவிட் டுயர்த்து
மிரவினிற் றங்க வெளிவர விரந்து
மிருவியம் புனத்திடை யெரியுயிர்ப் பெறிந்தும்
தெரிந்தலர் கொய்துந் பொழிற்குறி வினவியு
20
  முடலொடும் பிணைந்தகை யாய்துயி லொற்றிச்
செறியிருட் குழம்பகஞ் சென்றுபளிங் கெடுத்த
விற்பொழிற் கிடைக்கு மளவுநின் றுலைந்தும்
பன்னாட் பன்னெறி யழுங்கின ரின்று
முகனைந்து மணத்த முழவந் துவைக்க
25
  வொருகாற் றூக்கி நிலைய மொளிர்வித்து
மூவுட லணைத்தமும் முகத்தொ ரோமுகத்
தெண்கடிப்பு விசித்த கல்லல் செறிய
விருட்குற ளூன்றியெம் மருட்களி யாற்றி
யுருள்வாய்க் கொக்கரை யும்பர்நாட் டொலிக்கக்
30
  கரங்கால் காட்டித் தலைய மியக்கி
யிதழவிழ் தாமரை யெனுந்தகு ணித்தந்
துவைப்பநின் றமைகரத் துக்கவைக டோற்றிக்
கரிக்கா லன்ன மொந்தைகலித் திரங்கத்
துடியெறிந் திசைப்பத் துகளம் பரப்பி
    வள்ளம் பிணைத்தசெங் கரடிகை மல்க
வெரியக லேந்திவெம் புயங்கமிசை யாக்கி