மூலமும் உரையும்61



 
 

செய்யுள் 6

நேரிசையாசிரியப்பா

 
   
5
  நிணமுயி ருண்ட புலவு பொறாது
தலையுட லசைத்துச் சாணைவாய் துடைத்து
நெய்குளித் தகற்று நெடுவேல் விடலை
யந்தண ருகுநீர்க் கருட்கரு விருந்து
கோடா மறைமொழி நீடுறக் காணுங்
10
  கதிருடல் வழிபோய்க் கல்லுழை நின்றோர்
நெருப்புருத் தன்ன செருதிறல் வரைந்த
வாசகங் கண்டு மகிழ்ந்தது மிவணே
துணைவிளக் கெரியு நிலைவிழிப் பேழ்வாய்த்
தோகைமண் புடைக்குங் காய்புலி மாய்க்க
15
  வாய்செறித் திட்ட மாக்கடிப் பிதுவே
செடித்தலைக் காருட லிடிக்குரற் கிராதார்
மறைந்துகண் டக்கொலை மகிழ்வழி யிந்நிலை
தவநதி போகு மருமறைத் தாபதர்
நன்னார்கொ ளாசி நாட்டிய திவ்வுழை
20
  கறையணற் புயங்க னெரிதழல் விடத்தை
மலைமரை யதக மாற்றிய வதுபொல்
கொடுமறக் கொலைஞ ராற்றிடை கவர
வெண்ணாது கிடைத்த மெய்ப்பொடி யாகவென்
25
  சிற்றிடைப் பெருமுலைப் பொற்றொடி மடந்தைதன்
கவைஇய கற்பினைக் காட்டுழி யிதுவே
குரவஞ் சுமந்த குழல்விரித் திருந்து
பாடலம் புனைந்தகற் பதுக்கையிவ் விடனே
யொட்டுவிட் டுலறிய பராரைநெட் டாக்கோட்
30
  டுதிர்பறை யொருவை யுணவூன் றட்டி
வளைவாய்க் கரும்பருந் திடைபறித் துண்ணக்
கண்டுநின் றுவந்த காட்சியு மிதுவே
செம்மணிச் சிலம்பு மரகதப் பொருப்புங்
குடுமியந் தழலு மவணிருட் குவையு
  முளைவரும் பகனு மதனிடை மேகமுஞ்
சேயிதழ் முளரியுங் காரிதழ்க் குவளையும்