மூலமும் உரையும்629



 
 

செய்யுள் 89

நேரிசையாசிரியப்பா

 
   
5
  ஊர்நகைத் துட்க வூக்குமோர் விருந்தினைக்
குவளையடி பூத்த கட்டவள வாணகைக்
குறுந்தொடி மடந்தைநந் தோழியுங் கேண்மோ
கவிரலர் பூத்தசெஞ் செம்மைவிற் குடுமி
மஞ்சடை கிளைத்த வரிக்குறு முட்டாட்
10
  கூரரி வாளன் றோகையஞ் சேவற்
கொடியோன் குன்றம் புடைவளர் கூடற்
கணிச்சியங் கைத்தலத் தருட்பெருங் காரண
னுலகுயிர் மகவுடைப் பசுங்கொடிக் கொருபாற்
பகுத்துயிர்க் கின்பந் தொகுத்துமெய்த் துறவினன்
15
  முளரிநீர்ப் புகுத்திய படமலர்த் தாட்டுணை
மணிமுடி சுமந்தநம் வயலணி யூரர்பின்
வளர்மறித் தகரெனத் திரிதரும் பாண்மக
னெனக்குறித் தறிகிலம் யாமே யெமது
மணியொளிர் முன்றி லொருபுடை நிலைநின்
20
  றன்ன வூரர் புல்லமும் விழுக்குடிக்
கடாஅக் கிளவியும் படாஅப் பழியு
மெங்கையர் புலவியி லியம்பின நம்பாற்
றனதுமுன் புன்மொழி நீளத் தந்து
மொன்றுபத் தாயிர நன்றுபெரப் புனைந்துங்
25
  கட்டிய பொய்ப்பரப் பனைத்துநிற் குறுத்திற்
பேரெறுழ்ச் சகர ரேழெனப் பறித்த
முதிர்திரை யடிக்கும் பரிதியந் தோழங்
காட்டையு ளிம்பர் காணத்
தோட்டிநின் றளிக்குந் தன்மையது பெறுமே.

(உரை)
கைகோள்: கற்பு. தலைவி கூற்று

துறை: பாணனொடு வெகுளுதல்.

     (இ-ம்.) இதற்கு, “அவனறிவு ஆற்ற அறியும்” (தொல். கற்பி. 6) எனவரும் நூற்பாவின்கண் ‘வாயிலின் வரூஉம் வகை’ எனவரும் விதி கொள்க.