634கல்லாடம்[செய்யுள்90]



 
 
செய்யுள் 90
நேரிசையாசிரியப்பா
 
   
5
  இலவலர் தூற்றி யனிச்சங் குழைத்துத்
தாமரை குவித்த காமர் சீறடித்
திருவின ளொருநகை யரிதினிற் கேண்மோ
வெல்லாந் தோற்ற விருந்த தோற்றமுந்
தன்னுட் டோன்றித் தானாதிற் றோன்றாத்
10
  தனிநடை நிறையு மொருடனிக் கோலத்
திருவடி வாகிப் பழமறை வேதிய
னான்மறைத் தாபதர் முத்தழற் களம்புக்
கரக்கர்துய்த் துடற்று மதுவே மானப்
பாசடை மறைத்தெழு முளரியங் கயத்துட்
15
  காரா னினங்கள் சேடெறிந் துழக்குங்
கூடற் கிறையவன் காலற் காய்ந்தோன்
றிருநடங் குறித்தநம் பொருபுன லூரனை
யெங்கையர் குழுமி யெமக்குந் தங்கையைப்
புணர்த்தினன் பாண்டொழிற் புல்லனென் றிவனைக்
20
  கோலிற் கரத்திற் றோலிற் புடைப்பக்
கிளைமுட் செறித்த வேலியம் படப்பைப்
படர்காய்க் கணைந்தபுன் கூழையங் குறுநரி
யுடையோர் திமிர்ப்ப வருமுயிர்ப் பொடுக்கி
யுயிர்பிரி வுற்றமை காட்டியவர் நீங்க
  வொட்டங் கொண்டன கடுக்கு
நாட்டவர் தடைமயற் றுதிர்த்து நடந்ததுவே.

(உரை)
கைகோள்: கற்பு. தலைவிகூற்று

     (இச்செய்யுளுக்கு எடுத்துக்காட்டிய திருக்கோவையார்ச் செய்யுள் கூற்றுவகையால் மாறுபட்டிருத்தலுணர்க.)

துறை: பாணனைப் பழித்தல்.

     (இ-ம்.) இதனை, அவனறிவு வற்றவறியுமாகலின் எனவரும் நூற்பாவின்கண் (தொல். கற்பி-6) பல்வேறு வகையினும் வாயிலின் வரூஉம் வகை’ என்பதன்கம் அமைத்துக்கொள்க.