|
|
செய்யுள்
90
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
இலவலர்
தூற்றி யனிச்சங் குழைத்துத்
தாமரை குவித்த காமர் சீறடித்
திருவின ளொருநகை யரிதினிற் கேண்மோ
வெல்லாந் தோற்ற விருந்த தோற்றமுந்
தன்னுட் டோன்றித் தானாதிற் றோன்றாத் |
10
|
|
தனிநடை
நிறையு மொருடனிக் கோலத்
திருவடி வாகிப் பழமறை வேதிய
னான்மறைத் தாபதர் முத்தழற் களம்புக்
கரக்கர்துய்த் துடற்று மதுவே மானப்
பாசடை மறைத்தெழு முளரியங் கயத்துட் |
15
|
|
காரா
னினங்கள் சேடெறிந் துழக்குங்
கூடற் கிறையவன் காலற் காய்ந்தோன்
றிருநடங் குறித்தநம் பொருபுன லூரனை
யெங்கையர் குழுமி யெமக்குந் தங்கையைப்
புணர்த்தினன் பாண்டொழிற் புல்லனென் றிவனைக் |
20
|
|
கோலிற்
கரத்திற் றோலிற் புடைப்பக்
கிளைமுட் செறித்த வேலியம் படப்பைப்
படர்காய்க் கணைந்தபுன் கூழையங் குறுநரி
யுடையோர் திமிர்ப்ப வருமுயிர்ப் பொடுக்கி
யுயிர்பிரி வுற்றமை காட்டியவர் நீங்க |
|
|
வொட்டங்
கொண்டன கடுக்கு
நாட்டவர் தடைமயற் றுதிர்த்து நடந்ததுவே. |
(உரை)
கைகோள்: கற்பு. தலைவிகூற்று
(இச்செய்யுளுக்கு எடுத்துக்காட்டிய
திருக்கோவையார்ச் செய்யுள் கூற்றுவகையால் மாறுபட்டிருத்தலுணர்க.)
துறை: பாணனைப்
பழித்தல்.
(இ-ம்.)
இதனை, அவனறிவு வற்றவறியுமாகலின் எனவரும் நூற்பாவின்கண் (தொல். கற்பி-6) பல்வேறு
வகையினும் வாயிலின் வரூஉம் வகை என்பதன்கம் அமைத்துக்கொள்க.
|