மூலமும் உரையும்643



 
 

செய்யுள் 92

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வெறிமறி மடைக்குரற் றோல்காய்த் தென்ன
விருக்கினு மிறக்கினு முதவாத் தேவர்தம்
பொய்வழிக் கதியக மெய்யெனப் புகாத
விழியுடைத் தொண்டர் குழீஇமுடி தேய்பத்
தளிர்த்துச் சிவந்த தண்டையந் துணைத்தாட்
10
  சேயோன் பரங்குன் றிழையெனச் செறித்துத்
டமிழ்க்கலை மாலை சூடித் தாவாப்
புகழ்க்கலை யுடுத்துப் புண்ணியக் கணவன்
பன்னெறி வளனிறப் பூட்சியிற் புல்லுந்
தொன்னிலைக் கூடற் றுடியிடை யகந்தனை
15
  யன்புளத் தடக்கி யின்பமுண் ணாரெனச்
சேவன்மண் டலித்துச் சினையடை கிடக்குங்
கைதைவெண் குருகெழ மொய்திரை யுகளு
முளைகடற் சேர்ப்ப னளிவிடந் தணிப்ப
நீலமுங் கருங்கொடி யடம்புஞ் சங்கமுங்
20
  கண்ணிற் கிடையிற் களத்திற் கழிதந்து
அலர்ந்து முலர்ந்து முடைந்து மனுங்கலின்
வட்குடை மைய லகற்றியன் பொருகாற்
கூறவும் பெறுமே யாறது நிற்க
விவணடை பெற்று மிவட்பயின் றிரங்கியு
  மோருழி வளர்ந்த நீரவிவ் வன்ன
மன்றெனத் தடையாக் கேண்மை
குன்றுமச் சூளினர் தம்மினுங் கொடிதே.

(உரை)
கைகோள்: களவு. தோழி கூற்று

துறை: அன்னமோ டாய்தல். குறிப்பு:-தலைவன் பிரிவினால் வருந்திய தலைவியை ஆற்றக்கருதிய தோழி அன்னத்தை நோக்கிக் கூறியது. இது தோழி கூற்றாக இதற்கெடுத்துக் காட்டாக வந்த திருக்கோவையார்ச் செய்யுள் தலைவி கூற்றாதல் உணர்க. இனி அச்செய்யுளை இவ்வாசிரியர் தோழி கூற்றாகக் கருதினர் எனக் கருதுதல் கூடும்.

     (இ-ம்.) இதற்கு, “நாற்றமுந் தோற்றமும்” தொல். களவி. 23) எனவரும் நூற்பாவின்கண் ‘அவன்விலங்குறினும்’ எனவரும் விதி கொள்க.