|
|
செய்யுள்
92
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
5
|
|
வெறிமறி
மடைக்குரற் றோல்காய்த் தென்ன
விருக்கினு மிறக்கினு முதவாத் தேவர்தம்
பொய்வழிக் கதியக மெய்யெனப் புகாத
விழியுடைத் தொண்டர் குழீஇமுடி தேய்பத்
தளிர்த்துச் சிவந்த தண்டையந் துணைத்தாட் |
10
|
|
சேயோன்
பரங்குன் றிழையெனச் செறித்துத்
டமிழ்க்கலை மாலை சூடித் தாவாப்
புகழ்க்கலை யுடுத்துப் புண்ணியக் கணவன்
பன்னெறி வளனிறப் பூட்சியிற் புல்லுந்
தொன்னிலைக் கூடற் றுடியிடை யகந்தனை |
15
|
|
யன்புளத்
தடக்கி யின்பமுண் ணாரெனச்
சேவன்மண் டலித்துச் சினையடை கிடக்குங்
கைதைவெண் குருகெழ மொய்திரை யுகளு
முளைகடற் சேர்ப்ப னளிவிடந் தணிப்ப
நீலமுங் கருங்கொடி யடம்புஞ் சங்கமுங் |
20
|
|
கண்ணிற்
கிடையிற் களத்திற் கழிதந்து
அலர்ந்து முலர்ந்து முடைந்து மனுங்கலின்
வட்குடை மைய லகற்றியன் பொருகாற்
கூறவும் பெறுமே யாறது நிற்க
விவணடை பெற்று மிவட்பயின் றிரங்கியு |
|
|
மோருழி
வளர்ந்த நீரவிவ் வன்ன
மன்றெனத் தடையாக் கேண்மை
குன்றுமச் சூளினர் தம்மினுங் கொடிதே. |
(உரை)
கைகோள்: களவு. தோழி கூற்று
துறை: அன்னமோ
டாய்தல். குறிப்பு:-தலைவன்
பிரிவினால் வருந்திய தலைவியை ஆற்றக்கருதிய தோழி அன்னத்தை நோக்கிக் கூறியது.
இது தோழி கூற்றாக இதற்கெடுத்துக் காட்டாக வந்த திருக்கோவையார்ச் செய்யுள் தலைவி
கூற்றாதல் உணர்க. இனி அச்செய்யுளை இவ்வாசிரியர் தோழி கூற்றாகக் கருதினர் எனக்
கருதுதல் கூடும்.
(இ-ம்.)
இதற்கு, நாற்றமுந் தோற்றமும் தொல். களவி. 23) எனவரும் நூற்பாவின்கண் அவன்விலங்குறினும்
எனவரும் விதி கொள்க.
|