660கல்லாடம்[செய்யுள்95]



எமது நல்ல மேகலையைத் தொடா தொழி எம்மை விடுவாயாக என்க,

     (வி-ம்.) தவம் செய்யாதார் செய்வன வெல்லாம் அவமே யாதலின் தவம் செய்திலாக வெந்தீவினையேம் என்றார் எவ்வம் எவம் என இடை குறைந்து நின்றது,எம்புலவி நினக்கத் துன்பமாய்த் தோன்றும் என்பாள் எவஞ்செய்து நின்றென்றாள்,இனி என்பது நீ இத்தகையன் ஆயின பின்னும் என்பதுபட நின்றது,சிவன் செய்த சீர் அருள் ஆர் தில்லையூர என்றது,நின்னால் வெறுக்கப்பட்டாராலும் நீ காதலிக்கப்படுகின்றாய்,அதற்குக் காரணம் நின்னுார் சிவன் செய்த சீரருள் ஆர்ந்திருத்தலே என்பதுபட நின்றது,தவஞ் செய்திலாத வெந்தீவினையேம் என்றது யாம் காதலிக்கவும் எம்மை நீ வெறுத்தற்குக் காரணம் எந்தீவினையே என்பது தோன்ற நின்றது,புல்லம் - புல்லல், அதாவது தழுவுதல்,இனி புல்லம் என்பதனைப் புன்மை என்று கொண்டு நின் சேயிழையார் எமக்குப் புதிதாகச் செய்த புன்மைகளை யாம் பொறுக்க மாட்டோம் என்று கறினுமன் அமையும்,எவன் செய்து நின்று என்பதும் பாடம்,என்காது என்பதும் பாடம் மெய்ப் பாடு - வெகுளி, பயன் - புணர்தல்,

 
 

செய்யுள் 95

நேரிசையாசிரியப்பா

 
   
5
  பெருநிலத் தேவர்கண் மறைநீ ருகுப்ப
மற்றவர் மகத்துள் வளரவி மாந்த
விடையோ னருச்சனைக் குரிமையின் முன்னவ
னன்னவன் றன்னுடன் கடிகையேழமர
வன்றியு மிமையாக் கண்ணெனல் காட்ட
10
  வாயிரம் பணாடவி யரவுகடு வாங்கத்
தேவருண் மருந்துட னீட்நின் றுதவ
வுடன் முனி செருலின ருடல்வழி நடப்ப
நாரணன் முதலாந் தேவர்படைதோற்றத்
தண்மதிக் கலைக டானற வொடுங்க
15
  வெரிந்தெழு மாக்க ரேனையர் மடிய
மறையவன் குண்ட முறைமுறை வாய்ப்ப
வலன்றரு முலகத் தருந்தொழி லோங்கப்
பாசுட லுளைமா வேழணிபெற்ற
வொருகாற் றேர்நிறைந் திருளுடைத் தெழுந்த
  செங்கதிர் விரித்தசெந் திருமலர்த் தாமரைப்
பெருந்தே னருந்தியெப் பேரிசை யனைத்தினு