690கல்லாடம்[செய்யுள்99]



றிருந்தேன.் இவள் ஆகூழ் தலைவனைக் கொணர்ந்து நிறுத்தி இவளைப் பாதுகாத்து என்பது குறிப்பாற் கூறியபடியாம். பரிசு-தன்மை. பாவை: ஆகுபெயர். ஆவி-உயிர். கறுத்தல்-வெகுளுதலும் கரிய நிறமுடைத்தாதலும் ஆகலின் சிலேடைவகைகளால் முகிலுக்கு இவ்விரு பொருளும் பொருந்துதல் உணர்க. காவி-கருங்குவளை. கதுமென: விரைவுக் குறிப்பு. மெய்ப்பாடு-பெருமிதம். பயன்-ஆற்றுவித்தல்.

 
 

செய்யுள் 99

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வடவனத் தொருகாண் மாறுபட் டெதிர்ந்து
வழிநடந் தனது மரக்கா லன்றி
முதற்றொழிற் பதுமன் முன்னா வவ்வுழி
மான்றலைக் கரத்தினிற் கூட்டினை வயக்கித்
தூக்கல் வளையுடன் றொடர்ப்பத மெறிந்து
10
  மற்றதன் றாளம் புத்திரி யாக
நிமிர்த்தெறி காலிற் கடைக்கண் கிடத்திப்
பாணியிற் சிரம்பதித் தொருநடை பதித்துக்
கொடுகாட் டிக்குக் குறியடுத் தெடுக்கும்
புங்கவம் வாரம் புடைநிலை பொறுத்துச்
15
  சச்ச புடத்திற் றனியெழு மாத்திரை
யொன்றைவிட் டொருசீ ரிரண்டுற வுறுத்தி
யெடுத்துத் துள்ளிய வினமுத் திரைக்கு
மங்கலப் பாணி மாத்திரை நான்குடன்
சென்றெறிந் தொடுங்குந் துறமிடை திருத்தி
20
  ஞெள்ளலிற் குனித்த விருமாத் திரைக்குப்
பட்டடை யெடுக்கப் புலிதம் பரப்பிப்
புறக்கான் மடித்துக் குவித்தெறி நிலையம்
பதினான் கமைத்து விடுமாத் திரைக்கு
வானமும் பிதாவும் பாணியில் வகுத்து
25
  வட்டங் கொடுக்கு மிந்திரை பணிக்கு
மாத்திரை யாறுடன் கும்பம் பதித்து
வலவை யிடாகினி மண்ணிருந் தெடுத்த
காலுடன் சுழல வாடிய காளி
நாணிநின் றொடுங்கத் தானுமோர் நாடகம்
  பாண்டுரங் கத்தொரு பாடுபெற் றமைந்த