திருக்கோவையார் 281 ஆம் செய்யுள்
தூதுகண்டழுங்கல்
அஃதாவது:
தூதுவரவுரைப்பக் கேட்ட தலைவி இஃது அயலார் தூதாகலான் இவை வருவன செல்வனவாக நின்றன.
காதலர் இன்று வராதிருக்கின்றது என்செய்யக் கருதியெண்று அறிகிலேன் என ஏதிலார் தூதுகண்
டழுங்காநிற்றல் என்றவாறு. அதற்குச் செய்யுள்:
வருவன செல்வன
தூதுக
ளேதில வான்புலியூ
ரொருவன தன்பரி னின்பக்
கலவிக ளுள்ளுருகத்
தருவன செய்தென தாவிகொண்
டேகியென் னெஞ்சிற்றம்மை
யிருவின காதல ரேதுசெய்
வானினின்ருக் கின்றதே.
|
அயலுற்ற தூதுவரக் கயலுற்ற கண்ணி மயலுற்றது.
(இ-ள்)
ஏதில தூதுகள்-அயலவாகிய தூதுகள்; வருவன செல்வன-வருவனவும் போவனவுமாயிருக்கின்றன; வான்
புலியூர் ஒருவனது-சிறந்த புலியூரின்கண் ணெழுந்தருளிய ஒப்பற்ற சிவபெருமானுடைய; அன்பரின்-அன்பர்போல்;
இன்பக் கலவிகள்-இன்பமான புணர்ச்சிகளை; உள் உருகத் தருவன செய்து-நெஞ்சுருகத் தருமவற்றை
முன்னே செய்து; எனது ஆவி கொண்டு ஏகி-பின்னே என் உயிரையே கவர்ந்து போய்; என்
நெஞ்சில் தம்மை இருவின-என் நெஞ்சத்திலே தம்மை நிலைநிறுத்தின, காதலர்-எம்பெருமான்;
இன்று இருக்கின்றது ஏது செய்வான்-இன்று வாளாவிருக்கின்றது என் செயக் கருதியோ யானறிகின்றிலேன்
என்பதாம்.
(வி-ம்.)
தூதுவர் வருகின்றனரேயல்லது தூதுவிடுத்த எம்பெருமான் வாராது வாளா விருக்கின்றனர். அங்ஙனமிருத்தற்குக்
காரணம் அறிகின்றிலேன் என்றவாறு. தூதர் ஏதிலார் ஆகலின் ஏதில தூதுகள் என்றாள்.
கலவி-புணர்ச்சி. இருவின-இருத்தின நிலை நிறுத்தின. மெய்ப்பாடு-அழுகை. பயன்-அயாவுயிர்த்தல்.
|
|
செய்யுள்
100
நேரிசையாசிரியப்பா
|
|
|
|
|
|
வளைந்துநின்
றுடற்று மலிகுளிர்க் குடைந்து
முகிற்றுகின் மூடி மணிநெருப் பணைத்துப்
புனமெரி காரகிற் புகைபல கொள்ளும் |
|