மூலமும் உரையும்95



நொந்துரைத்தது எனப் பொருள்கூறித் தலைவி கூற்றாக்குக. இப்பொருட்கு நெடுந்தேர் நுமது சேரிக்கண் வந்து தங்கிற்று என உரைக்க. தொன்மை-முற்பிறப்பில். வீ-மலர். மெய்ப்பாடு-உவகை, பயன், தலைவன் வரவினைச் சேரிப் பரத்தையர்க்குப் பாங்காயினார் அவர்க்குணர்த்துதல். தலைவி கூற்றாயின் மெய்ப்பாடு-அழுகை. பயன்-ஊடுதல்.

 
 

செய்யுள் 10

நேரிசையாசிரியப்பா

 
   
5
  வடிவிழிச் சிற்றிடைப் பெருமுலை மடவீர்
தொழுமின் வணங்குமின் சூழ்மின் றொடர்மின்
கட்டுதிர் கோதை கடிமல ரன்பொடு
முணக முகையின் முலைமுகந் தரிமி
னுருளிற் பூழி யுள்ளுற வாடுமி
10
  னெதிர்மி னிறைஞ்சுமி னேத்துமி னியங்குமின்
கருப்புரந் துதைத்த கல்லுயர் மணித்தோள்
வாசம் படரு மருத்தினு முறுமின்
பெருங்வின் முன்னாட் பேணிய வருந்தவங்
கண்ணிடை யுளத்திடைக் காண்மின் கருதுமின்
15
  பூவஞ் சுண்ணமும் புகழ்ந்தெதி ரெறிமின்
யாழிற் பரவுமி னீங்கிவை யன்றிக்
கலத்துமென் றெழுமின் கண்ணளி காண்மின்
வென்சுடர் செஞ்சுட ராகிய விண்ணொடு
புவிபுன லனல்கான் மதிபுல வோனென
20
  முழுது நிறைந்த முக்கட் பெருமான்
பனிக்கதிர்க் குலவன் பயந்தருள் பாவையைத்
திருப்பெரு வதுவை பொருந்திய வந்நாட்
சொன்றிப் பெருமலை தின்றுநனி தொலைத்த
காருடற் சிறுநகைக் குறுந்தாட் பாரிட
25
  மாற்றா தலைந்த நீர்நசை யடக்க
மறிதிரைப் பெருநதி வரவழைத் தருளிய
கூடலம் பதியுறை குணப்பெருந் கடவுண்
முண்டக மலர்த்து முதிராச் சேவடி
தரித்த உள்ளத் தாமரை யூரன்
  பெற்றுணர்த் தாமம் புனைந்தொளிர் மணித்தேர்