10. பரத்தையிற் பிரிவு கண்டவர் கூறல்
 
 
வடி விழிச் சிற்றிடைப் பெரு முலை மடவீர்!-  
தொழுமின்; வணங்குமின்; சூழ்மின்; தொடர்மின்;  
கட்டுதிர் கோதை கடி மலர்; அன்பொடு  
முண்டக முகையின் முலை முகம் தருமின்;  
உருளின் பூழி உள்ளுற ஆடுமின்;
5
எதிர்மின்; இறைஞ்சுமின்; ஏத்துமின்; இயங்குமின்;  
கருப்புரம் துதைந்த கல் உயர் மணித் தோள்  
வாசம் படரும் மருத்தினும் உறுமின்;  
பெருங் கவின், முன்நாள், பேணிய அருந் தவம்  
கண்ணிடை, உளத்திடை, காண்மின்; கருதுமின்;
10
பூவும் சுண்ணமும் புகழ்ந்து எதிர் எறிமின்;  
யாழில் பரவுமின்; ஈங்கு, இவை அன்றி,  
'கலத்தும்' என்று எழுமின்; கண்ணளி காண்மின்--  
வெண்சுடர் செஞ்சுடர், ஆகிய விண்ணொடு,  
புவி, புனல், அனல், கால், மதி புலவோன், என,
15
முழுதும் நிறைந்த முக்கட் பெருமான்  
(பனிக் கதிர் குலவன் பயந்தருள் பாவையைத்  
திருப் பெரு வதுவை பொருந்திய அந் நாள்,  
சொன்றிப் பெரு மலை தின்று நனி தொலைத்த,  
கார் உடல் சிறு நகைக் குறுந் தாட் பாரிடம்
20
ஆற்றாது அலந்த நீர் நசை அடக்க,  
மறிதிரைப் பெரு நதி வரவழைத்தருளிய  
கூடல் அம் பதி உறை குணப் பெருங் கடவுள்)  
முண்டகம் அலர்த்தும் முதிராச் சேவடி  
தரித்த உள்ளத் தாமரை ஊரன்
25
பொன் துணர்த் தாமம் புரிந்து ஒளிர் மணித் தேர்,  
வீதி வந்தது; வரலான் நும்  
ஏதம் தீர இரு மருங்கு எழுந்தே.
உரை