14.
தேர் வரவு கூறல் |
|
|
|
சலியாப்
பராரைத் தமனியப் பொருப்பு எனும் |
|
ஒரு
கால் சுமந்த விண் படர் பந்தரின், |
|
மூடிய
நால் திசை முகில்-துகில் விரித்து; |
|
பொற்சிலை
வளைத்து, வாயில் போக்கி; |
|
சுருப்பு
அணி நிரைத்த கடுக்கை அம் பொலந் தார் |
5
|
நிரைநிரை
நாற்றி; நெடுங் காய் மயிர் அமைத்து; |
|
ஊதையில்
அலகு இட்டு; உறை புயல் தெளித்து; |
|
போற்றுறு
திருவம் நால் திசைப் பொலிய; |
|
மரகதத்
தண்டின் தோன்றி விளக்கு எடுப்ப; |
|
குடத்தியர்
இழுக்கிய அளை சிதறிய போல் |
10
|
கிடந்தன
ஆம்பி பரந்தன மறைப்ப, |
|
பிடவு
அலர் பரப்பிப் பூவை பூ இட; |
|
[உயர்
வான் அண்டர் கிளை வியப்பு எய்த,] |
|
உறவு,
இணை, நட்பு, கிளை, வியப்பு எய்த, |
|
முகில்
முழவு அதிர; ஏழ் இசை முகக்கும் |
15
|
முல்லை
யாழொடு சுருதி வண்டு அலம்ப; |
|
களவு
அலர் சூடி, புறவு பாட்டு எடுப்ப; |
|
பசுந்
தழை பரப்பிக் கண மயில் ஆல; |
|
முல்லை
அம் திருமகள், கோபம் வாய் மலர்ந்து, |
|
நல்
மணம் எடுத்து, நாள் அமைத்து அழைக்க-- |
20
|
வரி
வளை முன்கை வரவர இறப்பப் |
|
போன
நம் தனி நமர், புள் இயல் மான் தேர், |
|
கடு
விசை துரந்த கான் யாற்று ஒலியின், |
|
எள்ளினர்
உட்க, வள் இனம் மடக்கி, முன் |
|
தோன்றினர்:
ஆகலின், நீயே, மடமகள்! |
25
|
(முன்
ஒரு காலத்து, அடுகொலைக்கு அணைந்த |
|
முகில்
உருப் பெறும் ஓர் கொடுமரக் கிராதன், |
|
அரு
மறைத் தாபதன் அமைத்திடு செம்மலை, |
|
செருப்புடைத்
தாளால், விருப்புடன் தள்ளி, |
|
வாய்
எனும் குடத்தில் வரம்பு அற எடுத்த |
30
|
அமுது
கடல் தள்ளும் மணி நீர் ஆட்டி, |
|
பின்னல்
விட்டு அமைத்த தன் தலை மயிர் அணை |
|
திரு
மலர் விண் புக மணி முடி நிறைத்து, |
|
வெள்
வாய் குதட்டிய விழுதுடைக் கருந் தடி |
|
வைத்து
அமையாமுன் மகிழ்ந்து அழுது உண்டு, அவன் |
35
|
மிச்சிலுக்கு
இன்னும் இச்சை செய் பெருமான்) |
|
கூடல்
நின்று ஏத்தினர் குலக் கிளை போலத் |
|
துணர்ப்
பெறு கோதையும் ஆரமும் புனைக; |
|
புதை
இருள் துரக்கும் வெயில் மணித் திருவும், |
|
தண்ணம்
பிறையும், தலை பெற நிறுத்துக; |
40
|
இறை
இருந்து உதவா நிறை வளைக் குலனும்; |
|
பெருஞ்
சூடகமும், ஒருங்கு பெற்று அணிக; |
|
நட்டுப்
பகையினர் உட்குடி போல, |
|
உறவு
செய்து ஒன்றா நகை தரும் உளத்தையும், |
|
கொலையினர்
நெஞ்சம் கூண்ட வல் இருள் எனும் |
45
|
ஐம்
பால் குழலையும், அணி நிலை கூட்டுக; |
|
விருந்து
கொண்டு உண்ணும் பெருந் தவர் போல, |
|
நீங்காத்
திருவுடை நலனும் |
|
பாங்கில்
கூட்டுக, இன்பத்தில் பொலிந்தே! |
|