17. உலகியல்பு உரைத்தல்  
 
'பழமை நீண்ட குன்றக் குடியினள்,  
வருந்தாது வளர்த்தும், குடங்கை துயிற்றியும்,  
மானின் குழவியொடு கெடவரல் வருத்தியும்,  
பந்து பயிற்றியும், பொற்கழங்கு உந்தவும்,  
பாவை சூட்டவும், பூவை கேட்கவும்,
5
உடைமை செய்த மடமையள் யான்' என,  
எம் எதிர் கூறிய இம் மொழிதனக்குப்  
பெருமை நோக்கின் சிறுமை-அது உண்டே:  
செறி திரைப் பாற்கடல் வயிறு நொந்து ஈன்ற  
செம்மகள் கரியோற்கு அறுதி போக,
10
மகவின் இன்பம் கடல் சென்றிலவால்;  
அன்றியும், விடிமீன் முளைத்த தரளம்,  
வவ்வின ரிடத்தும் அவ்வழி ஆன;  
திரைக் கடல் குடித்த கரத்த மா முனிக்கும்,  
திங்கள் வாழ் குலம் தங்கும் வேந்தற்கும்,
15
அமுத ஊற்று எழுந்து நெஞ்சம் களிக்கும்  
தமிழ் எனும் கடலைக் காணி கொடுத்த  
பொதியப் பொருப்பும், நெடு முதுகு வருந்திப்  
பெற்று வளர்த்த கல் புடை ஆரம்  
அணியும் மா மகிழ்நர் பதி உறை புகுந்தால்,
20
உண்டோ சென்றது? கண்டது உரைக்க:  
பள்ளிக் கணக்கர் உள்ளத்துப் பெற்ற  
புறம் ஆர் கல்வி, அற மா மகளைக்  
கொண்டு வாழுநர்க் கண்டு அருகு இடத்தும்,  
அவர் மன அன்னை கவரக் கண்டிலம்;
25
பெருஞ் சேற்றுக் கழனி கரும்பு பெறு காலை,  
கொள்வோர்க்கு அன்றி அவ் வயல் சாயா;  
பூம் பணை திரிந்து பொதி அவிழ் முளரியில்,  
காம்பு பொதி நறவம் விளரியோடு அருந்தி,  
கந்தித் தண்டலை வந்து வீற்றிருந்து,
30
கடி மலர்ப் பொழிலில் சிறிது கண் படுத்து,  
மயக்கம் நிறை காமத்து இயக்கம் கொண்டு,  
நின்ற நாரணன் பரந்த மார்பில்  
கலவாக் குங்குமம் நிலவிய தென்னக்  
கார் வான் தந்த பேர் கொள் செக்கரில்,
35
வீதி வாய்த் தென்றல் மெல்லென்று இயங்கும்  
மூதூர்க் கூடல் வந்தருள் முக்கணன்  
(காமனை, அயனை, நாமக் காலனை,  
கண்ணால், உகிரால், மலர் கொள் காலால்,  
சுட்டும், கொய்தும், உதைத்தும், துணித்த
40
விட்டு ஒளிர் மாணிக்க மலையின்) ஒரு பால்,  
அடங்கப் படர்ந்த பசுங்கொடி-அதனை  
வளர்த்த சேண் மலை, உளத் துயர் கொண்டு  
தொடர்ந்ததும் இலை: கீழ் நடந்த சொல் கிடக்க--  
பாலைக்கிழத்தி திருமுன் நாட்டிய
45
சூலத் தலையின் தொடர்ந்து சிகை படர்ந்து  
விடுதழல் உச்சம் படு கதிர் தாக்க,  
பாடல்சால் பச்சைக் கோடகக் காற்றை,  
மை இல் காட்சிக் கொய் உளை நிற்ப,  
வயிற்றில் இருந்து வாய் முளைத்தென்ன
50
இரு கால் முகனிற்கு அருகா, துரந்து,  
படும் அழல் நீக்கக் குட கடல் குளிக்கும்  
நா-வாய் குறியாத் தீ வாய் பாலையில்--  
தம்மில் இன்பம் சூளுடன் கூடி,  
ஒன்றி விழைந்து சென்றாட்கு உடைந்து,
55
பொன் பதி நீங்கி, உண்பது மடங்கி,  
முழங்கப் பெருங்குரல் கூஉய்ப்  
பழங்கண் எய்தியது பேதைமை அறிவே.
உரை