19.
பிறை தொழுக என்றல் |
|
|
|
நெடு
வளி உயிர்த்து, மழைமதம் ஒழுக்கி, |
|
எழுமலை
விழுமலை புடைமணி ஆக, |
|
மீன்புகர்
நிறைந்த வான்குஞ்சர முகம் |
|
வால்
பெற முளைத்த கூன் கோடுஆனும்; |
|
பேச
நீண்ட பல் மீன் நிலைஇய |
5
|
வானக்கடலில்
தோணி-அதுஆனும்; |
|
கொழுநர்
கூடும் காம-உததியைக் |
|
கரைவிட
உகையும் நாவாய் ஆனும்; |
|
கள்
அமர் கோதையர், வெள்ளணி-விழவில், |
|
ஐங்கணைக்
கிழவன் காட்சி உள் மகிழ |
10
|
இழைத்து
வளைத்த கருப்பு வில்ஆனும்-- |
|
நெடியோன்
முதலாம் தேவர் கூடி, |
|
வாங்கிக்
கடைந்த தேம் படு கடலில், |
|
அமுதுடன்
தோன்றிய உரிமை யானும்; |
|
நின்
திரு நுதலை ஒளி விசும்பு உடலில் |
15
|
ஆடி
நிழல் காட்டிய பீடு-அதுவானும்; |
|
கரை
அற அணியும் மானக் கலனுள் |
|
தலை
பெற இருந்த நிலைபுகழானும்; |
|
மண்
அகம் அனைத்தும் நிறைந்த பல் உயிர்கட்கு |
|
ஆயா
அமுதம் ஈகுத லானும்; |
20
|
(பாற்கடல்
உறங்கும் மாயவன் போல, |
|
தவள
மாடத்து அகல் முதுகு பற்றி, |
|
நெடுங்
கார் கிடந்து படும் புனல் பிழியும் |
|
கூடல்
வீற்றிருந்த நாடகக் கடவுள் |
|
பொன்சுடர்
விரித்த கொத்து அலர் கொன்றையும், |
25
|
தாளியும்,
அறுகும், வால் உளை எருக்கமும், |
|
கரந்தையும்,
வன்னியும், மிடைந்த செஞ் சடையில், |
|
இரண்டு-ஐஞ்ஞூறு
திரண்ட முகம் எடுத்து, |
|
மண்,
பிலன், அகழ்ந்து, திக்கு நிலை மயக்கி, |
|
புரியாக்
கதமோடு ஒருபால் அடங்கும்) |
30
|
கங்கையில்
படிந்த பொங்கு தவத்தானும்; |
|
அந்
நெடு வேணியின் கண்ணி என இருந்து, |
|
தூற்றும்
மறு ஒழிந்த ஏற்றத்தானும்-- |
|
மணி
வான் பெற்ற இப் பிறையைப் |
|
பணிவாய்,
புரிந்து, தாமரை மகளே! |
35
|