2. தாய் அறிவு கூறி வரைவு கடாதல்
 
   
'பூ', 'மணி', 'யானை', 'பொன்', என எடுத்து,  
திங்களும், புயலும், பரிதியும், சுமந்த  
மலை வரும் காட்சிக்கு உரியஆகலின்,  
நிறையுடைக் கல்வி பெறு மதி மாந்தர்  
ஈன்ற செங் கவி எனத் தோன்றி, நனி பரந்து,
5
பாரிடை இன்பம் நீளிடைப் பயக்கும்  
பெரு நீர் வையை வளை நீர்க் கூடல்  
உடல், உயிர், என்ன உறைதரு நாயகன்  
(கடுக்கை மலர் மாற்றி வேப்பலர் சூடி,  
ஐவாய்க் காப்பு விட்டு அணி பூண் அணிந்து,
10
விரிசடை மறைத்து மணி முடி கவித்து,  
விடைக்கொடி நிறுத்திக் கயற்கொடி எடுத்து,  
வழுதி ஆகி முழுது உலகு அளிக்கும்,  
பேர் அருள் நாயகன்) சீர் அருள் போல,  
மணத்துடன் விரிந்த கைதைஅம் கானல்,
15
நலத் தொடர் வென்றிப் பொலம் பூண் குரிசில்  
சின்னம் கிடந்த கொடிஞ்சி மான் தேர்,  
நொச்சிப் பூ உதிர் நள் இருள் நடு நாள்,  
விண்ணம் சுமந்து தோற்றம் செய்தென,  
தன் கண்போலும் என்கண் நோக்கி,
20
கள்வரைக் காணும் உள்ளம் போலச்  
செம் மனம் திருகி, உள்ளம் துடித்து,  
புறன் வழங்காது, நெஞ்சொடு கொதித்தனள்,  
மாறாக் கற்பின் அன்னை--  
கூறு ஆம் மதியத் திரு நுதற் கொடியே!
25
உரை