22. வேறுபடுத்துக் கூறல்  
 
கண்ட காட்சி, சேணின், குறியோ?  
என்னுழி நிலையா உள்ளத்தின் மதியோ?  
சூர்ப்பகை-உலகில் தோன்றினர்க்கு அழகு  
விதிக்கும் அடங்கா என்பன விதியோ?  
என்னுடைக் கண்ணும் உயிரும் ஆகி,
5
உள் நிகழ் இன்பம் உள்ளாள் ஒருத்தி--  
மலைக்குஞ் சரத்தின் கடக் குழி ஆகி,  
நெடு மலை விழித்த கண்ணே ஆகி,  
அம் மலைத் திருநுதற்கு அழியாது அமைத்த  
வெள்ளைகொள் சிந்துர நல் அணி ஆகி,
10
தூர நடந்த தாள் எய்ப்பு ஆறி  
அமுதொடு கிடக்கும் நிறைமதிப் பக்கம்  
ஒருபால் கிடந்த துணை மதி ஆகி,  
அருவி வீசப் பறவை குடிபோகி  
விண்டு நறவு ஒழுக்கும் பாண்டில் இறால் ஆய்,
15
இளமை நீங்காது காவல் கொள் அமுதம்  
வரையர மாதர் குழுவுடன் அருந்த  
ஆக்கியிடப் பதித்த வள்ளமும் ஆகி,  
இடை வளி போகாது நெருங்கு முலைக் கொடிச்சியர்  
சிறு முகம் காணும் ஆடி ஆகி,
20
சிறந்தன, ஒரு சுனை, இம் மலை--ஆட,  
அளவாக் காதல் கைம்மிக்கு அணைந்தனள்:  
அவளே நீயாய், என் கண் குறித்த  
தெருமரல் தந்த அறிவு நிலை கிடக்க;  
சிறிது, நின் குறு வெயர் பெறும் அணங்கு ஆறி,
25
ஒரு கணன் நிலைக்க மருவுதி ஆயின்,  
இந் நிலை பெயர உன்னும் அக் கணத்தில்,  
தூண்டா விளக்கின், ஈண்டு, அவள் உதவும்:  
அவ்வுழி, உறவு மெய் பெறக் கலந்து, இன்று,  
ஒரு கடல் இரண்டு திருப் பயந்தாங்கு,
30
வளைத்த நெடுங் கார்ப் புனத்து, இருவீரும்--  
மணி நிற ஊசல் அணி பெற உகைத்தும்;  
கருங் கால் கவணிடைச் செம்மணி வைத்து,  
பெருந்தேன் இறாலொடு குறி விழ எறிந்தும்;  
வெண் துகில் நுடங்கி, பொன் கொழித்து, இழியும்
35
அருவி ஏற்றும்; முழை மலை கூஉயும்;  
பெருஞ் சுனை விழித்த நீலம் கொய்தும்;  
கொடுமரம் பற்றி, நெட்டிதண் பொலிந்து,  
தினைக் குரல் அறையும் கிளிக் கணம் கடிதிர்:  
(வெள்ளி, இரும்பு, பொன், எனப் பெற்ற
40
மூன்று புரம் வேவ, திருநகை விளையாட்டு,  
ஒரு நாள், கண்ட பெருமான், இறைவன்,  
மாதுடன் ஒன்றி, என் மனம் புகுந்து,  
பேணா உள்ளம் காணாது நடந்து,  
கொலை களவு என்னும் பழுமரம் பிடுங்கி,
45
பவர் சுவர் இடித்துப் புதுக்கக் கட்டி,  
அன்புகொடு மேய்ந்த நெஞ்சமண்டபத்து,  
பாங்குடன் காணத் தோன்றி, உள் நின்று,  
பொன் மலர்ச் சோலை விம்மிய பெரு மலர்  
இமையோர் புரத்தை நிறை மணம் காட்டும்
50
கூடல்அம் பதியகம் பீடுபெற இருந்தோன்  
இரு தாள் பெற்றவர் பெருந் திருப் போல)  
மருவிய பண்ணை இன்பமொடு விளைநலம்  
சொல்லுடன் அமராது ஈங்கு--  
வில்லுடன் பகைத்த செந் திரு நுதலே!
55
உரை